டாட்டூ போடுற இடமா இது?.. ரணகளத்திலும் ஒரு குதூகலம்... ஆண்ட்ரியா வெளியிட்ட செல்ஃபி!
சென்னை : நோ என்ட்ரி, பிசாசு2, வட்டம், மாளிகை, அரண்மனை 3 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.
திரைத்துறையில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
தற்போது இவர் டாட்டூ போட்ட இடத்தை காட்டியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆண்ட்ரியா
பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்தார் ஆண்ட்ரியா. இப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றதை அடுத்து, தரமணி,துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, இறுதியாக விஜயுடன் மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்துள்ளார்.

வித்தியாசமான கதை
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஆண்ட்ரியா துப்பாறிவாளன் திரைப்படத்தில் கொள்ளை , கொலை செய்யும் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வித்தியாசமான படமாக இருந்தது. அதேபோல அரண்மனை 2 திரைப்படத்தில் பேயாக நடித்திருந்தார்.

ராஜன் பொண்டாட்டியா
அதேபோல, வெறிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை படத்தில் சந்திரா கதாபாத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா. அந்த படத்தில் அவர், ராஜன் பொண்டாட்டிடா என்று திமுருடன் அவர் பேசிய வசனம் இவரை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது.

பிசாசு போட்டோஸ்
தற்போது , மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்காக தயாராக உள்ளது. இப்படத்திலிருந்து மிரட்டும் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன.

செம டாட்டூ
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேண்டை லைட்டாக இறக்கி டாட்டூ குத்தி இருப்பதை காட்டி உள்ளார்.வெள்ளை நிற ஸ்லீவ் லஸ் பனியனும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் போட்டி இருக்கும் ஆண்ட்ரியா கண்ணாடி முன் நின்று வயிற்றில் குத்தி உள்ள பட்டாம்பூச்சி டாட்டூ தெரியும்படி செல்ஃபி எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் ஆண்ட்ரியா, டாட்டூ போடுறா இடமா அது என்றும், டாட்டூ சரியாவே தெரியல என்றும் இரட்டை அர்த்தத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











