Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னை கிண்டல் செய்த கோழைகள் தில் இருந்தா என் முன்னாடி வாங்க பார்ப்போம்: நடிகை அனுஷ்கா
மும்பை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை ட்விட்டரில் தவறாக குறிப்பிட்டதற்காக யார் தன்னை கிண்டல் செய்தாலும் கவலை இல்லை என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணம் அடைந்த செய்தியை அறிந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர் கலாமின் பெயரை ஏபிஜெ அப்துல் கலாம் ஆசாத் என்று தவறுதலாக குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த மக்கள் கலாம் பெயரை எப்படி தவறாக எழுதலாம் என்று கூறி ட்விட்டரில் அனுஷ்காவை கிண்டல் செய்தனர். இதையடுத்து அனுஷ்கா தனது ட்வீட்டில் ஆசாத் என்ற பெயரை நீக்கினார்.
இந்நிலையில் இது குறித்து அனுஷ்கா மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அது தெரியாமல் நடந்த தவறு. என்னை கிண்டல் செய்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. என் நோக்கம் சரியானது. கம்ப்யூட்டருக்கு பின்னால் அமர்ந்து கமெண்ட் போடுபவர்கள் கோழைகள், முகம் தெரியாதவர்கள். எங்கே அவர்கள் என் முகத்திற்கு எதிராக கிண்டல் செய்யட்டும் பார்க்கலாம் என்றார்.