Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கிய மலையாள நடிகை அபூர்வா போஸ்
திருவனந்தபுரம்: காஷ்மீர் மாநில மழை வெள்ளத்தில் மலையாள நடிகை அபூர்வா போஸ் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் பேய் மழையால் அங்கு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.
இந்நிலையில் நடிகை அபூர்வா போஸ் உட்பட 150 மலையாளிகள் காஷ்மீர் சுற்றுலா சென்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அபூர்வா போஸ். இவர் 5 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் உள்பட 11 பேர் காஷ்மீரில் மலை ஏறும் பயி்ற்சிக்காக காஷ்மீர் சென்றனர்.
இந்த பயிற்சியை முடித்து விட்டு திரும்பிய இவர்கள் ஸ்ரீநகரில் உள்ள காம்ரேடுஇன் என்ற ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த ஓட்டலை வெள்ளம் சூழ்ந்தது. மாடி வரை வெள்ளத்தில் மூழ்கியது.
இதையடுத்து அறைகளில் தங்கியிருந்தவர்கள் மேல் தளத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை வரை அபூர்வா போஸ் கொச்சியில் உள்ள தனது குடும்பத்திருடன் போனில் பேசியுள்ளார். அதற்கு பின்னர் அவர் உள்பட யாரும் வீட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையை காஷ்மீரில் சுற்றுலா சென்ற மலையாளிகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உம்மன்சாண்டி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 150க்கும் மேற்பட்ட மலையாளிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது 5 ஓட்டல்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் உடனடியாக அவர்கள் அங்கிருந்து வர முடியாத நிலை உள்ளது. மலையாளிகளை மீட்க சிறப்பு விமானங்களை அனுப்புமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.