Don't Miss!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'சொந்தக் குரல்'-ஆசின் வருத்தம்!
தசாவதாரம் படத்தில்தான் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசியிருப்பதாக கூறப்படுவது தனக்கு வருத்தம் தந்துள்ளதாக ஆசின் கூறியுள்ளார்.
Click here for more images |
வேல் படத்தின் ஷூட்டிங்குக்கா சூர்யாவுடன் ஸ்விட்சர்லாந்து சென்றிருந்த ஆசின் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ளார்.
ஊர் வந்து சேர்ந்தவருக்கு தசாவதாரம் யூனிட்டால் ஒரு மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாம். தசாவதாரம் படத்தின் முதல் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்தி சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில் கமல், ஆசின், மல்லிகா ஷெராவத் ஆகியோர் இடம் பெற்றுள்ள படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், படம் குறித்தும் சில குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.
ஆசின் சொந்தக் குரலில், பிராமணப் பெண் வேடத்தில் பிரமாதமாக டப்பிங் கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. முதல் முறையாக ஆசின் தனது சொந்தக் குரலில் வசனம் பேசியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதுதான் ஆசினுக்கு விசனத்தைக் கொடுத்துள்ளதாம். இதுகுறித்து ஆசின் கூறுகையில், எனது முதல் படமான எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் முதலே நான் சொந்தக் குரலில்தான் பேசி நடித்து வருகிறேன்.
ஆனால் இதை தசாவதாரம் படக்குழுவினர் மறந்தது ஆச்சரியம் அளிக்கிறது.
எம். குமரன் முதல் போக்கிரி வரை நான் சொந்தக் குரலில்தான் பேசியுள்ளேன். கஜினி இந்திப் படத்திலும் கூட நான் சொந்தக் குரலில்தான் பேசி நடிக்கிறேன்.
தசாவதாரம் படத்தில் வசனம் பேசுவதற்காக பிரத்யேக கவனம் எடுத்துக் கொண்டு, தமிழ்ப் பிராணமப் பெண் போல வசனம் பேசியுள்ளேன். தஞ்சாவூர் பக்கம் பேசப்படும் பிராமண பாஷையை இதில் நான் பேசியுள்ளேன்.
ஒரு முழுமையான நடிகையாக திகழ வேண்டுமானால் அந்த நடிகை சொந்தக் குரலில் பேசி நடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நடிகைக்கும், அவர் ஏற்ற கேரக்டருக்கும் முழுப் பரிமாணம் கிடைக்கும் என்றார்.
வேல் படத்தின் முதல் பாதிப் படத்துக்கான வசனத்தை பேசி முடித்து விட்டாராம் ஆசின். அதுவும் ஒன்றரை நாட்களில் அதை முடித்துக் கொடுத்துள்ளாராம்.
விசனத்தை விடுங்க, விருது கிடைக்குமான்னு பாருங்க!