Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விமானிகள் அறையில் உட்கார்ந்தது குற்றம்- நித்யா மேனனிடம் விசாரணை
பிரபல மலையாள நடிகை நித்யா மேனன், தமிழில் 180-ல் அறிமுகமானார்.
ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, 'மாலினி 22, பாளையங்கோட்டை' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பெங்களூரிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் பறந்த அவர், விமானம் எப்படிப் பறக்கிறது என்று பார்க்க ஆசையாக உள்ளது," என்று விமானிகளிடம் கூறியுள்ளார்.
நடிகை ஆயிற்றே... உடனே தாராளமா வாங்க என்று அழைத்து விமானிகள் அமரும் இருக்கையில் அமர வைத்துள்ளனர்.
விமான போக்குவரத்து விதிகளின்படி விமானிகள் அறைக்குள் அந்தியர் எவரும் நுழையக் கூடாது. அது சட்டப்பட்டி குற்றமாகும். இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு புகார் பறந்தது. இதையடுத்து அதிகாரிகள் புகாரில் சம்பந்தப்பட்ட இரு விமானிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்தனர்.
அடுத்து நித்யா மேனனையும் விசாரிக்கின்றனர். நித்யாமேனன் விமானிகள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தது குற்றம் என்பதால், அவருக்கு தண்டனை வழங்க பரிந்துரைக்கப் போவதாக விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.