Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆயிஷா, ஆயிஷா ....
பிரபு தேவாவின் ஆயிஷா மோகம் தலைக்கேறி, அவரை இந்தி போக்கிரியின் நாயகியாக்கி விட்டது.
ஆயிஷா டாக்கியா. இந்தித் திரையுலகில் கிளாமர் அலையைப் பரப்பி வரும் இளம் நாயகி. இவரை சிவாஜியில் ரஜினிக்கு ஜோடியாகப் போடக் கூட பரிசீலித்தார்கள். ஆனாலும் கடைசி நேரத்தில் சில பல காரணங்களால் ஆயிஷாவுக்கு டாட்டா காட்டி விட்டனர். ஷ்ரியா வந்து சேர்ந்தார்.ஆனால் ஆயிஷா மீது தமிழ் சினிமாக்காரர் ஒருவர் மட்டும் படா பாசமாக இருந்தார். அவர் வேறு யாருமல்ல, பிரபு தேவாதான். நல்ல ஆட்டாக்கார நடிகைகள் என்றால் பிரபு தேவாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.
அந்த வகையில் ஆட்டத்தில் அசத்தும் ஆயிஷாவை எப்படியாவது தனது படத்தில் பிடித்துப் போட்டு விட வேண்டும் என்று மோகம் கொண்டிருந்தார்.
போக்கிரி படம் தமிழில் உருவானபோது முதலில் இலியானாவைக் கேட்டார். தெலுங்கு போக்கிரியில் இலியானாதான் ஹீரோயின். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆயிஷாவை முயற்சித்தார் பிரபு தேவா. ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் சல்மான் கானை வைத்து இந்தியில் போக்கிரியை இயக்கும் வாய்ப்பு பிரபு தேவாவைத் தேடி வந்தது. ஆஹாஹா, வந்தச்சுடா வசமான வாய்ப்பு என்று புளகாங்கிதமடைந்த பிரபு தேவா, அப்படத்தில் சல்மானின் நாயகியாக ஆயிஷாவைப் போட்டு விட்டார் (முதலில் ஆசின்தான் இதில் நடிப்பதாக இருந்தது தெரியும்தானே!)
தனது மனம் கவர்ந்த ஹீரோயினே கிடைத்து விட்டதால் உற்சாகமாகியுள்ள பிரபு தேவா, ஆயிஷாவை கூட்டிக் கொண்டு பாங்காக் பறந்துள்ளாராம். பயப்படாதீர்கள், ஒரு பாடல் காட்சிக்காகத்தான். அங்கு ஆட்டத்தையும், பாட்டத்தையும் முடித்து விட்டு மும்பை ரிட்டர்ன் ஆகிறார்கள்.
சொல்லிக் கொடுப்பதை விட படு சிறப்பாக ஆடி பிரபு தேவாவுக்கு திருப்தி கொடுக்கிறாராம் ஆயிஷா.
டாக்கியா, போட்டுத் தாக்குயா!