Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பானுவின் 'மூன்று'
ஹரி இயக்கத்தில் வெளியான தாரமிபரணியில் முதலில் நயனதாராதான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால், கேரளாவிலிருந்து பானுவைக் கூட்டி வந்து நடிக்க வைத்தார் ஹரி.
ஹரியின் அறிமுகமான நயனதாரா மிகப் பெரிய ரேஞ்சுக்கு உயர்ந்தது போல பானும் பலே உயரத்தை எட்டுவார் என கூறப்பட்டது. ஆனால் பானுவோ, முதல் படத்தோடு ஊருக்குப் போய் விட்டார்.
இப்போதைக்கு நடிப்புக்கு டாட்டா, படிக்கப் போகிறேன் என்று கூறி வந்த பானு, மலையாளத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் பெரிய இடைவெளிக்குப் பிறகு 2வது படத்தில் புக் ஆகியுள்ளார் பானு. மூன்று என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் பானுதான் நாயகி. ஹரியின் உதவியாளரான சரவணன் இப்படத்தை இயக்கப் போகிறார்.
படத்தில் நாயனாக நடிக்கவிருப்பது லிங்குச்சாமியின் சொந்தக்காரரும், பிறப்பு படத்தில் நடித்தவருமான பிரபா. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.
மறுபடியும் வந்துட்டீங்களே, படிப்பு என்னாச்சு என்று பானுவிடம் கேட்டால், படிப்பு முடிந்து விட்டது. இதனால்தான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். நல்ல கேரக்டர்களாகப் பார்த்துப் பார்த்து நடிக்கப் போகிறேன் என்கிறார்.