Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தனுஷ் அம்மா ஆனார் பானுப்பிரியா
ஒரு காலத்தில் அசத்தல் நாயகியாக கலக்கி வந்த பானுப்பிரியா இப்போது அழகான அம்மா ஆகி விட்டார். பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடிக்கிறார் பானுப்பிரியா.
முன்னாள் நாயகிகளுக்கு கலைச் சேவையிலிருந்து அவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெற மனம் வருவதில்லை. அக்கா, அம்மா, அண்ணி என ஏதாவது ஒரு கேரக்டரில் தலை காட்ட விரும்புவார்கள்.முன்னாள் நாயகியான அர்ச்சனா, பரட்டை என்கிற அழகு சுந்தரம் படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இப்போது பானுப்பிரியாவும் தனுஷின் அம்மா ஆகியுள்ளார்.
பொல்லாதவன் படத்தில் தனுஷின் அம்மாவாக நடிக்கிறாராம் பானுப்பிரியா. இப்படத்தில் தனுஷுக்கு அம்மா வேடத்தில் ஏதாவது ஒரு பிரபல நடிகையை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டபோது அனைவரின் ஓட்டுக்களையும் பெற்றவர் பானுப்பிரியாதான்.
இந்த வாய்ப்பை உடனே ஒத்துக் கொண்டாராம் பானுப்பிரியா. இதுகுறித்து பானுப்பிரியா கூறுகையில், மீண்டும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தது சந்தோஷமாக உள்ளது.
இதற்கு முன்பு கூட எனக்கு பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வாய்ப்புகள் அளித்தனர். ஆனால் சில காரணங்களால் அவற்றை ஏற்க முடியாத நிலையில் இருந்தேன்.
ஆனால் இப்போது நான் ஃப்ரீயாகத்தான் இருக்கிறேன். அதனால்தான் பொல்லாதவன் பட வாய்ப்பை தட்டாமல் ஏறறுக் கொண்டேன். பொல்லாதவன் படக் கதை என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. இதில் நடிக்கவும் நல்ல வாய்ப்பு உள்ளது என்கிறார் சந்தோஷமாக.
மறுபடியும் பானுப்பிரியாவை பார்க்கப் போகிறோம் என்பதை நினைக்கவே சந்தோஷமா இருக்குல்ல?