Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாவனாவை தூக்கினார் பாலா
நான் கடவுள் படத்திலிருந்து பாவனாவை தூக்கி விட்டார் பாலா.
பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் நான் கடவுள் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பாவனாவை புக் செய்தார் பாலா. சில காட்சிகளையும் அவரை வைத்து எடுத்தார்.ஆனால் அவர் குறித்து பாலாவுக்கு திடீரென அதிருப்தி எழுந்தது. இதனால் பாவனாவை நீக்க அவர் முடிவு செய்துள்ளதாக நாம் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது பாவனாவை அதிகாரப்பூர்வமாக தூக்கி விட்டாராம் பாலா.
மீரா ஜாஸ்மினை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க அவர் முயற்சி செய்து வருகிறார். மீரா தவிர மேலும் இரு புதுமுகங்களும் பாலாவின் பரிசீலனையில் உள்ளனராம்.
படத்தின் ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சினைகள் தலை தூக்கி வந்தன. முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கும், பாலாவுக்கும் இடையே திடீரென பிரச்சினை ஏற்பட்டது. அடிதடி வரை அது போனதாக கூறப்பட்டது.
பின்னர் எல்லாம் சரியாக ஹீரோ ஆனார் ஆர்யா. பின்னர் பாவனாவின் மீது பாலாவுக்கு அதிருப்தி எழுந்தது. பாவனாவின் கால்ஷீட் சொதப்பல்தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் குழப்பத்தில் இருந்தார் பாலா. இந்த நிலையில் சமீபத்தில் பாவனா நடித்து வெளியான தீபாவளி, கூடல் நகர் ஆகிய படங்களைப் பார்த்தார் பாலா. அதில் அவரது நடிப்பும், கேரக்டர்களும் பாலாவின் அதிருப்தியைக் கூட்டும் வகையில் இருந்தன.
இதையடுத்து பாவானாவை தூக்கி விட முடிவு செய்தார் பாலா. தற்போது மீரா ஜாஸ்மினை ஹீரோயினாக்க பாலா முடிவு செய்துள்ளார். அதேசயம், இரு புதுமுகங்களையும் அவர் அழைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளாராம்.
நான் கடவுள் நாயகி யார் என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரலாம்.