Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நேற்று பாவனா துணிந்து செய்த செயல்: பாராட்டும் திரையுலகம்
கொச்சி: காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை பாவனா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
படப்பிடிப்பில் இருந்து வீட்டுக்கு திரும்பிய நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு 2 மணிநேரம் மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவரின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன பாவனா படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கினார்.
ப்ரித்விராஜ்
ப்ரித்விராஜ் ஹீரோவாக நடிக்கும் ஆதம் படத்தின் நாயகியாக பாவனா ஒப்பந்தமானார். இதையடுத்து நடந்ததையே நினைத்து வீட்டில் முடங்காமல் மீண்டும் நடிக்க வருமாறு ப்ரித்விராஜ் அவரை ஊக்குவித்தார்.
பாவனா
ப்ரித்விராஜ் கொடுத்த தைரியத்தில் பாவனா ஆதம் படப்பிடிப்பில் நேற்று கலந்து கொண்டார். பாதிக்கப்பட்ட போதிலும் அதை தாண்டி மீண்டும் நடிக்க வந்த அவரை பார்த்து திரையுலகினர் பெருமிதம் கொண்டுள்ளனர்.
பாராட்டு
ஆதம் படப்பிடிப்பில் முதன்முதலாக கலந்து கொண்ட பாவனாவை பாராட்டி ஃப்ரித்விராஜ் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார். பாவனாவின் துணிச்சலை, தன்னம்பிக்கையை அவர் பாராட்டியுள்ளார்.
நடிகைகள்
பாவனா துணிந்து போலீசில் புகார் கொடுத்தது பல நடிகைகளுக்கு தைரியத்தை அளித்துள்ளது. பாலியல் தொல்லைகளுக்கு ஆளான நடிகைகள் பலர் தற்போது அதை வெளியே கூறத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.