Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரு இரவுக்கு அழைத்த தயாரிப்பாளர்: அதிர வைத்த ஸ்ரீகாந்த் பட நடிகை
Recommended Video
மும்பை: பட வாய்ப்புக்காக ஒரு இரவு படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளார் நடிகை ஸ்ருதி மராதே.
மராத்தி பட உலகில் பிரபலமானவர் ஸ்ருதி மராதே. அவர் இந்திர விழா, நான் அவனில்லை 2, குரு சிஷ்யன், அரவான் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவரின் பெயரை குறிப்பிடாமல் பட வாய்ப்புக்காக படுக்கை அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
ஒரு ட்வீட் போட்டு நாசம் பண்ணிட்டார்: விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடரும் படக்குழு?
நடிகை
நான் 16 வயதில் இருந்து இந்த சினிமா துறையில் உள்ளேன். இத்தனை ஆண்டுகளாக கேமராவுக்கு முன்னால் கொண்டாடப்படுவதும், பின்னால் கேவலப்படுத்தப்படுவதுமாக உள்ளது. நடிகர்கள், நடிகைகள் என்றாலே சொகுசாக வாழ்கிறார்கள் எந்று மக்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பட வாய்ப்பு
நான் நடிக்க வந்த புதிதில் தென்னிந்திய படம் ஒன்றில் பிகினி அணிந்து நடிக்க சொன்னார்கள். யோசிக்காமல் ஒப்புக் கொண்டேன். எப்படி பிகினி அணிந்து நடிக்கப் போகிறேன், இது தேவையா என்று எந்த கேள்வியும் எனக்குள் எழவில்லை. பட வாய்ப்பு கிடைக்கிறது, அது தான் முக்கியம்.
மன வேதனை
சில ஆண்டுகள் கழித்து மராத்தி ஷோ மூலம் நான் பிரபலமானபோது மக்கள் நான் முன்பு நடித்த பிகினி காட்சியை பார்த்துவிட்டு என்னை பயங்கரமாக கிண்டல் செய்தனர். அது என்னை பாதிக்காதது போன்றே என் நடிப்பை தொடர்ந்தேன்.
தயாரிப்பாளர்
ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கூறி நன்றாக பேசிக் கொண்டிருந்த அவர் திடீர் என்று அட்ஜஸ்ட் பண்ண வேண்டும், ஒரு ராத்திரி என்றெல்லாம் வேறு மாதிரியாக பேசினார்.
அதிர்ச்சி
தயாரிப்பாளர் பேசியதை கேட்டும் கேட்காதது போன்று இருக்க முடியாது. அதனால், நான் உங்களுடன் படுக்கையை பகிர்ந்தால், ஹீரோ யாருடன் படுப்பார் என்று கேட்டேன். தயாரிப்பாளர் அதிர்ந்துவிட்டார். இது குறித்து நான் புகார் தெரிவித்த பிறகு அந்த தயாரிப்பாளர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
துணிச்சல்
அன்று நான் எனக்காக மட்டும் அனைத்து பெண்களுக்காகவும் அப்படி துணிந்து செயல்பட்டேன். என் உடைகள் அல்ல என் திறமை, கடின உழைப்பு, வெற்றி தான் நான் யார் என்பதை நிர்ணயிக்கும் என்று ஸ்ருதி மராதே தெரிவித்துள்ளார்.