யானைக் காதலியான கேத்ரீன் தெரசா!
மெட்ராஸ் படம் மூலம் நம் கவனம் ஈர்த்த கேத்ரீன் தெரசா தற்போது ஆர்யா ஜோடியாக மஞ்சப்பை ராகவன் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாக தாய்லாந்தில் படமாக்கியிருக்கிறார்கள். நாற்பதுக்கு மேற்பட்ட யானைகள் மத்தியில் கேத்ரீன் மாட்டிக்கொள்வது போலவும், அந்த யானைகளிடம் இருந்து ஆர்யா அவரைக் காப்பாற்றுவது போன்றும் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் காட்சியை படமாக்கியபோது யானைகளுடன் ரொம்ப்ப்ப்ப்பவே ஒட்டிக்கொண்டாராம் கேத்ரீன். "யானைகள் பார்க்கத்தான் பயப்படும் அளவிற்கு இருக்கின்றன. பழகினால் குழந்தைகளாகி விடுகின்றன," என்று உருகி இருக்கிறார்.
கும்கி பார்ட் டூவுக்கு ரெடி என சிக்னல் கொடுக்கிறாரோ!
Comments


Click it and Unblock the Notifications