Don't Miss!
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாக்ஸிம் செலீனா!
பிரபல மாக்ஸிம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் பாலிவுட் ஹாட் ஸ்டார் செலீனா ஜெட்லி இடம் பெற்றுள்ளார். விலங்குகள் மீது செலீனா கொண்டுள்ள அன்புக்கு மரியாதை செய்யும் வகையில், இந்த மரியாதையை மேக்ஸிம் கொடுத்துள்ளதாம்.
பாலிவுட்டை தனது கிளாமர் அலையால் கலக்கி வருபவர் செலீனா ஜெட்லி. பரந்து விரிந்த அவரது கவர்ச்சியால் ரசிகர்கள் கிறங்கிப் ேபாய்க் கிடக்கும் நிலையில் அவரது மனசுக்குள் விலங்குகள் மீதான பாசம் சமீபத்தில் வெளிப்பட்டது.விலங்குகள் மீதான பரிவுணர்ச்சிக்கான மக்கள் அமைப்பு என்ற அமைப்பு சமீபத்தில், பல்வேறு பகுதிகளிலிருந்து பிடித்து வரப்படும் யானைகளை மும்பை நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்று போராடியது.
தங்களது போராட்டத்திற்கு எம்.பிக்கள் மேனகா காந்தி, சத்ருகன் சின்ஹா, பிரியா தத் மற்றும் பல்வேறு பிரபலங்களின் ஆதரவையும் கோரியது. இந்த அமைப்பு எடுத்த முயற்சியின் விளைவாக மும்பைக்குள் யானைகளைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் செலீனா ஜெட்லியும் கலந்து கொண்டு யானைகளுக்காகப் பரிந்து பேசினார். அவர் கூறஉகையில், யானைகள் புத்திசாலித்தனமானைவை. உணர்ச்சிபூர்வமானவை. மனிதர்களைப் போலவே தங்களது குழுவில் எந்த யானையாவது இறந்தால் அதற்காக கண்ணீர் விட்டு அழுது தங்களது சோகத்தை வெளிப்படுத்தும்.
ஆனால் யானைகளைப் பிடித்து வைப்பதன் மூலம் அவற்றின் பாதுகாப்பும், சுகாதாரமும் கேள்விக்குறியாகி விடுகிறது.
மும்பைக்கு நான் வந்தபோது பல யானைகள் பாதுகாப்பின்றியும், சுகாதாரமின்றியும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனேன். இதுகுறித்து விலங்குகள் மீதான பரிவுணர்ச்சிக்கான மக்கள் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருவது ஆறுதல் அளிக்கிறது.
எனக்கு நிறைய இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். என்னுடன் சேர்ந்து அவர்களும் யானைகளுக்காக பரிந்து பேச வேண்டும், அவற்றின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றார் செலீனா.
செலீனாவின் இந்தப் பேச்சுதான் மாக்ஸிம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் செலீனாவின் படம் இடம் பெற வழி வகுத்துள்ளதாம்.
பேஷ், பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?