Don't Miss!
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- News Silent Period பற்றி தெரியுமா? கண்காணிப்பில் சமூக ஊடகம்! கருத்து கந்தசாமிகளே உஷார்!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடிக்க வந்தாச்சுன்னா... சாயா 'பலே' பதில்!
திருடா திருடி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை திருட வந்தவர் சாயா சிங். மன்மத ராசா பாட்டுக்கு இவர் போட்ட ஆட்டம் இன்னும் ரசிகர்களின் மன மேடையிலிருந்து அகலவில்லை. இப்படிப்பட்ட சாயா சிங்குக்கு தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்புகள் வரவில்லை. குத்துப் பாட்டுக்கும் கூட ஆடிப் பார்த்து விட்டார் சாயா சிங்.
இந்த நிலையில் இப்போது சின்னத் திரைக்கு வந்து விட்டார் சாயா. நாகம்மா என்ற டிவி சீரியலில் சாயா சிங் நடித்து வருகிறார். அதுவும் டபுள் ஆக்ட் வேறு. இதுகுறித்து அவரிடம் கேட்டால், நடிக்க வந்து விட்டால், நடிப்பதற்கான ஸ்கோப்பை மட்டுமே நான் பார்ப்பேன். சின்னத் திரை, பெரிய திரை என்ற வித்தியாசம் எல்லாம் எனக்குக் கிடையாது.
மற்றபடி, சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் நான் டிவிக்கு வரவில்லை. இப்போதும் கூட எனக்கு சினிமா வாய்ப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் எனக்குப் பிடித்த கேரக்டர் கிடைத்தால்தானே நடிக்க முடியும் என்றார் சாயா சிங்.
கீழே விழுந்தாலும் 'சாயா'த பெண் 'சிங்'கம்தான் சாயா!