Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தமிழ்நாடு வெள்ள நிவாரணத்திற்கு நடிகை ஹன்சிகா 15 லட்சம் நன்கொடை
சென்னை: தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதிக்கு நடிகை ஹன்சிகா ரூ 15 லட்சம் நிதியுதவி அளித்து இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் மழை தமிழக மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிக, நடிகையர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஹன்சிகாவும் ரூ 15 லட்சங்களை நன்கொடையாக அளித்திருக்கிறார்.இந்த நிதி காசோலையாக நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நடிகர் சங்கம் மூலமாக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு அது சென்றடையும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சத்யராஜ், பிரபு, விக்ரம் பிரபு,சிபிராஜ்,சிவகார்த்திகேயன்,ரஜினி,விஷால் மற்றும் நாசர் ஆகியோர் நிதியுதவி அளித்திருக்கின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகினரும் நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.