ஏற்கனவே ஒரு முறை பாவனாவை கடத்த முயன்ற திலீப் அடியாட்கள்
கொச்சி: நடிகை பாவனாவை கடத்த முயன்று தோல்வியடைந்து இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றது தெரிய வந்துள்ளது.
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் ஆலுவாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்ட பாவனாவை பழிவாங்கவே திலீப் ஆள் வைத்து இவ்வாறு செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மலையாள நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாவனாவை அசிங்கப்படுத்த 2013ம் ஆண்டே திலீப் திட்டம் போட்டது தெரிய வந்தது. ஏற்கனவே ஒருமுறை திலீப்பின் ஆட்கள் பாவனாவை கடத்த முயன்று தோல்வியடைந்துள்ளனர்.
இரண்டாவது முயற்சியில் தான் வெற்றி பெற்று திலீப் சொன்னதை சொன்னபடி செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











