காட்டு யானை மீது சவாரி செய்த நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி மீது புகார்

By Shankar

பிராணிகள் நலச் சங்க அனுமதி பெறாமல் காட்டு யானை மீது சவாரி செய்ததாக நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி ஆகியோர் மீது புகார் கிளம்பியுள்ளது.

பிரபல மலையாள நடிகைகள் நஸ்ரியா நசீம், ரஞ்சனி ஹரிதாஸ் இருவரும் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை மீது சவாரி செய்துள்ளனர்.

Elephant Ride: Complaint on Nazria, Ranjani

இதனை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த செயலாளர் வெங்கடாசலம் என்பவர் திருச்சூரில் உள்ள பிராணிகள் நல வாரியத்திடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், "2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பிராணிகள் நலவாரியத்தின் அனுமதி இல்லாமல் யானைகள் மீது சவாரி செய்வது குற்றமாகும். பிராணிகள் நலவாரியத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமல் நடிகைகள் இருவரும் சில குழந்தைகளுடன் யானை மீது சவாரி செய்துள்ளனர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கு துணை போன வனத்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ரஞ்சனி, தெருநாய்கள் நலனுக்காக குரல் கொடுத்தவர். அவர் இப்படியொரு புகாருக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X