Don't Miss!
- News லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் "அதிக முறை" சரித்திரம் படைத்தவர்கள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நிர்வாணமாக நடிக்க நான் சினிமாவுக்கு வரவில்லை... நல்ல கதை இருக்க வேண்டும்... ரஜினி பட நடிகை அதிரடி!
சென்னை: கதையே இல்லாத படங்களில் எல்லாம் நிர்வாணமாக நடிக்க மாட்டேன் என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராதிகா ஆப்தே. வா லைஃப் ஹோ டோ எய்ஸி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
மிரட்டலான அரண்மனை 3 படம்... இன்று ஓடிடியில் ரிலீஸ்!
தொடர்ந்து பெங்காலி, மராத்தி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராதிகா ஆப்தே அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
தோனி படத்தின் மூலம் என்ட்ரி
அடிக்கடி அவரது அந்தரங்க போட்டோக்கள் இணையத்தில் வெளியாவது வாடிக்கை. இதனை பார்த்த ரசிகர்கள் வேண்டுமென்ற போட்டோக்களை வெளியிட்டு வருகிறீர்களா என கேட்டு விளாசியும் வருகின்றனர். தமிழில் தோனி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் நடிகை ராதிகா ஆப்தே.
கபாலி படத்தில் ராதிகா ஆப்தே
தொடர்ந்து கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் ஃபிளாஷ் பேக் கதாப்பாத்திரத்தில் நடித்தார் ராதிகா ஆப்தே. தொடர்ந்து வெற்றி செல்வன் படத்தில் நடித்த ராதிகா ஆப்தே, ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் ராதிகா ஆப்தே. இதன் மூலம் பெரும் பிரபலமானார்.
இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப
கடைசியாக தமிழில் சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தொடர்ந்து இந்தி இங்கிலிஷ் என பிஸியாக உள்ளார் ராதிகா ஆப்தே. எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நடித்து கொடுப்பதால் இயக்குநர்களின் முதல் சாய்ஸாக இருந்து வருகிறார் ராதிகா ஆப்தே.
விலைமாது கதாப்பாத்திரத்தில்...
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ராதிகா ஆப்தே, தனக்கு நிர்வாணமாக நடிக்கும் கதாப்பாத்திரங்களே வருகிறது என கொட்டித்தீர்த்துள்ளார். அவர் கூறியதாவது, ''சமீபத்தில் ஒரு இயக்குனர் என்னை சந்தித்து அவரது படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஏன் இதே போன்ற கதைகளுடன் வருகிறீர்கள் என கேட்டேன்.
நான் அதிர்ச்சியாகிவிட்டேன்
நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது மட்டுமின்றி ஏற்கனவே நிர்வாணமாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறீர்கள். அதனால் தான் இந்தப் படத்திலும் அதே போன்ற கதாபாத்திரம் செய்வீர்களோ என்ற எண்ணத்தில் உங்களை அணுகினேன் என்றார். அந்த இயக்குநர் கூறியதை கேட்டு நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன்.
அதற்காக சினிமாவுக்கு வரவில்லை
இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறல்ல. கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம். நிர்வாணமாக நடிக்க வைப்பதற்காகவே கண்டபடி கதைகளை கொண்டு வந்தால் எப்படி? நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை.
Recommended Video
கதையே இல்லாமல் நடிக்க மாட்டேன்
கதை பிடித்திருந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வேன். கதையே இல்லாமல் கவர்ச்சி காட்டவோ நிர்வாணமாக நடிக்கவோ மாட்டேன்'' என்றும் தடாலடியாக கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. நடிகை ராதிகா ஆப்தே இந்தி மற்றும் தெலுங்கில் வெளியான சில படங்களில் ஆடையில்லாமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.