Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னது டாப்ஸி 'அம்மா' ஆயிட்டாரா?
சென்னை: பாட்மிண்டன் வீரரைக் காதலிக்கும் நடிகை டாப்சி அம்மாவாகி விட்டார் என சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதால், கடும் கோபத்தில் இருக்கிறார் நடிகை டாப்சி.
செய்தியை வெளிட்டது நம்ம ஊரு பத்திரிக்கைகள் அல்ல வெளிநாட்டைச் சேர்ந்த பத்திரிக்கைகள். பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவைக் காதலித்து வரும் நடிகை டாப்சி தற்போது பட வேலைகளில் பிசியாக இருக்கிறார்.
டாப்சியின் காதலர் மத்தியாஸ் போவுடன் விளையாடி வரும் இணை வீரரான கேர்ஸ்டனுக்குத் தான் குழந்தை பிறந்திருக்கிறது, ஆனால் பத்திரிக்கைகள் மத்தியாஸ் போவின் காதலி டாப்சிக்கு குழந்தை பிறந்து விட்டதாக மாற்றி எழுதி விட்டன. அதனால் தற்போது உலகெங்கும் டாப்சி அம்மா ஆகி விட்டதாக பரவிய வதந்தி காட்டுத்தீ போன்று பரவி விட்டது.
இதைப் பற்றி கேள்விப்பட்ட நடிகை டாப்சி எனக்கேத் தெரியாமல் எனக்கு குழந்தையா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், மத்திதியாஸின் இணை வீரரான கேர்ஸ்டனுக்கு பிறந்த குழந்தையை எனக்குப் பிறந்ததாக மாற்றி எழுதி விட்டனர். எனக்கு தற்போது நடிப்பதற்கும், சொந்தத் தொழிலை கவனிப்பதற்குமே நேரம் சரியாக உள்ளது என்று கூறியிருக் கிறது டாப்சி பன்னு.
அதானே.. டாப்சி பன்னு.. நல்ல பொண்ணாச்சே!