Just In
- 10 min ago
காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!
- 35 min ago
கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing
- 43 min ago
லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 1 hr ago
பாலா ஏன் பின்னாடி நிக்கிறாரு? டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்!
Don't Miss!
- Sports
ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்? பின்னணி
- News
பழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு
- Lifestyle
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- Automobiles
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- Finance
4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திருமணம் நடக்கும்: வதந்தியை நம்பாதீங்க- அனன்யா

நடிகை அனன்யாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.
அனன்யாவுக்கு நிச்சயதார்த்தத்திற்கு முன்பே தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்தும் அதை அவர் தன் பெற்றோரிடம் கூறவில்லை என்று பேசப்பட்டது. கட்டினால் ஆஞ்சநேயனைத் தான் கட்டுவேன் என்று அனன்யா அடம்பிடித்ததாகவும், அதனால் அவரை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து அனன்யா கூறியதாவது,
என்னை யாரும் வீட்டுச் சிறையில் எல்லாம் வைக்கவில்லை. எனது திருமணம் பற்றி யாரோ பிடிக்காதவர்கள் வதந்தியைக் கிளப்பிவிடுகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம். தற்போது என் கையில் 5 படங்கள் உள்ளன. அதை நடித்து முடித்தவுடன் ஆஞ்சநேயனுடன் நிச்சயம் திருமணம் நடக்கும் என்றார்.