நான் ஒரு பான்டை, அழுக்குமூட்டை, குளிக்க மாட்டேன்... கங்கனா ரனாவத்தின் "கப்பு"ப் பேச்சு!
மும்பை: சிறு வயதில் தான் குளிக்காமல் அழுக்குமூட்டையாக இருந்ததாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். அவர் சுத்தமான இந்தியா திட்டத்திற்கான விளம்பரம் ஒன்றில் கடவுள் லட்சுமியாக நடித்துள்ளார். சுத்தமாக இல்லை என்றால் லட்சுமி உங்களை விட்டு சென்றுவிடுவார் என்று அந்த வீடியோவில் காண்பித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கங்கனா கூறுகையில்,

சோம்பேறி
நான் சிறு வயதில் ஒரு சோம்பேறி. சுத்தமாகவே இருக்க மாட்டேன். எனக்கு குளிக்கவே பிடிக்காது. நான் ஒரு அழுக்குமூட்டையாக இருந்தேன். இது தேராது என்று என் பெற்றோரும் கை கழுவிவிட்டனர். எனக்கு நண்பர்களே இல்லாமல் இருந்தது.

சுத்தம்
அதன் பிறகு சுத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். தற்போது எனக்கு குளிக்க மிகவும் பிடிக்கும். நான் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வேன் என்றார் கங்கனா.

விளம்பரம்
கங்கனா ரனாவத் சுத்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வரும் விளம்பர வீடியோ இணையதளங்களில் வெளியாகி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வீடியோ
இது தான் கங்கனா கடவுள் லட்சுமியாக வரும் வீடியோ,


Click it and Unblock the Notifications











