Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- News நாளை வாக்கு பதிவு: ஸ்டாலின், எடப்பாடி தலைமைக்கு அக்னி பரீட்சை ஏன் தெரியுமா? காரணமே 'பசி' பாஜகதான்!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'மணி சார் படத்துல நடிக்கணும்' கொக்குபோல காத்திருக்கும் அலியா பட்
மும்பை: மணிரத்னம் படத்தில் நடிக்க தான் காத்துக் கொண்டிருப்பதாக பாலிவுட் பியூட்டி அலியா பட் கூறியிருக்கிறார்.
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தனது ஹீரோயின்களை அழுத்தமாகவும், அழகாகவும் காட்டக் கூடியவர் என்பதால் பெரும்பாலான நடிகைகள் இவரின் படங்களில் நடிப்பதை லட்சியமாக கொண்டிருக்கின்றனர்.
தற்போது இந்த பட்டியலில் பாலிவுட் பியூட்டி அலியா பட்டும் இணைந்திருக்கிறார். கடந்தாண்டு வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானுக்கு எதிராக அலியா பட் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் துல்கருடன் ஜோடி போடும் அதிர்ஷ்டம் நித்யா மேனனுக்கே கிடைத்தது. சரி இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும், வருண் தவானுடன் இணைந்து நடிக்கலாம் என்று அலியா நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆனால் ஓகே ஜானு என்ற பெயருடன் இந்தியில் ரீமேக்காகும் ஓ காதல் கண்மணியில் நடிக்கும் வாய்ப்பானது, ஸ்ரத்தா கபூர் -ஆதித்யா ராய் கபூருக்கு கிடைத்திருக்கிறது.
இதனால் மணிரத்னத்தின் கதையில் நடிக்கும் வாய்ப்பும் அலியாவிடம் இருந்து நழுவி விட்டது. இந்நிலையில் சமீபத்திய விழா ஒன்றில் "எனது அப்பா மகேஷ் பட் தூண்டுதல் காரணமாகவே தென்னிந்தியப் படங்களை பார்க்க ஆரம்பித்தேன்.
மணி சாரின் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஒருவேளை நான் தென்னிந்திய சினிமாவில் நடித்தால் கண்டிப்பாக அது மணி சாரின் படமாகத் தான் இருக்கும்" என்று அலியா பட் தெரிவித்திருக்கிறார்.