Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அரசியலுக்கு வருகிறார் பிரீத்தி ஜிந்தா
மும்பை: நடிகை பிரீத்தி ஜிந்தாவிற்கு சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் என்ற ஆசை வந்துவிட்டது.
விளம்பர மாடலாக இருந்து பாலிவுட் நடிகையாக உயர்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. இதன்பின்னர் ஐபிஎல் 20 ஓவர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராக மாறினார். இப்போது அரசியல் ஆசை துளிர்விட ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதனை உறுதிப்பட்டுத்தியுள்ளார். அவர் சொன்னதை படியுங்களேன்.
நான் கவலைப்படுகிறேன்.
நாட்டில் சமீப காலங்களில் நடக்கும் நிகழ்வுகள் என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளன. எனவே, ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
மாற்றம் ஏற்பட முயற்சி
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நான் ஈடுபட வேண்டும் என்று கருதுகிறேன். இதனால் அரசியிலில் ஈடுபடுவது பற்றி சமீபகாலமாக யோசித்து வருகிறேன்.
நேர்மையான அரசியல்வாதி
அரசியலில் ஈடுபட்டாலும் நேர்மையாகத்தான் இருப்பேன். நிச்சயம் ஊழலில் ஈடுபட மாட்டேன். ஒரு நாள் மக்களை சந்தித்து எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்பேன்.
ஊழலை ஒழிக்க வேண்டும்
ஊழல் ஒழிந்தால் இந்தியா பிரகாசிக்கும். ஊழலால்தான் ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இது எனக்கு வேதனையாக இருக்கிறது.
கவர்ச்சிகரமான தோற்றம்
அரசியலில் ஈடுபட்டால் கவர்ச்சிகரமான அரசியல்வாதியாக இருப்பேன். நல்ல ஆடைகளுடனும், நல்ல கூந்தலுடனும் காட்சி அளிப்பேன்.