Don't Miss!
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
'5 கோடி சம்பளம் தாங்க'... சிரஞ்சீவிக்கு 'ஷாக்' கொடுத்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
ஹைதராபாத்: சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க 5 கோடி சம்பளம் கேட்டு, படக்குழுவை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜாக்குலின் 'மர்டர் 2', 'ஹவுஸ்புல் 2', 'கிக்', 'பிரதர்ஸ்' போன்ற பாலிவுட் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.
ஜாக்குலின் நடித்து சமீபத்தில் வெளியான 'ஹவுஸ்புல் 3' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக 'டிஷூம்', 'எ பிளையிங் ஜாட்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிரஞ்சீவியின் 150 வது படமாக உருவாகும் 'கத்திலண்டோடு' (கத்தி ரீமேக்) படத்தில் ஜாக்குலினை, சிரஞ்சீவிக்கு ஜோடியாக்க படக்குழு முயற்சித்துள்ளது.
இதற்காக பேச்சுவார்த்தை நடத்த சென்றவர்களிடம் 5 கோடி சம்பளம் தாங்க என்று கேட்டு அவர்களை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார். தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஜாக்குலின் ஆர்வம் காட்டாதது தான் இதற்குக் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் ஜாக்குலினும் இப்படத்தில் நடிக்க மறுத்ததால் படக்குழு ரொம்பவே அப்செட்டில் இருக்கிறதாம். இருந்தாலும் தந்தைக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க ராம் சரண் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறாராம்.