Don't Miss!
- News
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
- Sports
இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாக். முடிவே எடுக்காமல் திரும்பி வந்த ஜெய்ஷா.. என்ன நடந்தது
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
'5 கோடி சம்பளம் தாங்க'... சிரஞ்சீவிக்கு 'ஷாக்' கொடுத்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
ஹைதராபாத்: சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க 5 கோடி சம்பளம் கேட்டு, படக்குழுவை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜாக்குலின் 'மர்டர் 2', 'ஹவுஸ்புல் 2', 'கிக்', 'பிரதர்ஸ்' போன்ற பாலிவுட் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.

ஜாக்குலின் நடித்து சமீபத்தில் வெளியான 'ஹவுஸ்புல் 3' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக 'டிஷூம்', 'எ பிளையிங் ஜாட்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிரஞ்சீவியின் 150 வது படமாக உருவாகும் 'கத்திலண்டோடு' (கத்தி ரீமேக்) படத்தில் ஜாக்குலினை, சிரஞ்சீவிக்கு ஜோடியாக்க படக்குழு முயற்சித்துள்ளது.

இதற்காக பேச்சுவார்த்தை நடத்த சென்றவர்களிடம் 5 கோடி சம்பளம் தாங்க என்று கேட்டு அவர்களை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார். தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஜாக்குலின் ஆர்வம் காட்டாதது தான் இதற்குக் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் ஜாக்குலினும் இப்படத்தில் நடிக்க மறுத்ததால் படக்குழு ரொம்பவே அப்செட்டில் இருக்கிறதாம். இருந்தாலும் தந்தைக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க ராம் சரண் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறாராம்.