Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
36 வயதினிலே... சூர்யா டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ‘ராசாத்தி’!
சென்னை: 36 வயதினிலே படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு ஜோதிகா தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த போதே, சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஜோதிகா, தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பின் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார்.
8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஜோதிகா நடிக்கும் என்பதாலும், பெண்களைப் பற்றிய கதை என்பதாலும் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்திருக்கிறார் ஜோதிகா. இது தொடர்பாக சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது :-
ரசிகர்களின் பேராதரவுடன்...
பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாட விரும்பும் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த திரைப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. நான் உங்கள் முன் இன்று பெருமையுடன் நின்று கொண்டிருக்கக் காரணம் ரசிகர் பெருமக்களாகிய நீங்கள்தான்.
ஆதரவு...
உங்களில் ஒவ்வொருவரும் இந்த படத்தை ரசித்திருக்கிறீர்கள். பெண்களை வெற்றியை நீங்கள் போற்றுகிறீர்கள். அதனால்தான், இந்த படத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது.
கனவுகளை தியாகம் செய்யும் பெண்கள்..
சமுதாயத்தில் இனி பல வசந்திகள் தங்கள் லட்சியங்களை வெல்ல முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். இல்லத்தரசியாக அன்றாடம் பல பணிகளை ஆற்றி வரும் பெண்கள் தங்கள் கனவுகளை தியாகம் செய்கிறார்கள்.
|
பெண்கள் மதிக்கப் பட வேண்டும்...
அப்படிபட்ட பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என எனக்குள் ஒரு எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதையே இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.