twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னை முதலில் நைட்டியில் பார்த்தது என் கணவர் அல்ல சல்மான் கான்: நடிகை கரீனா

    By Siva
    |

    மும்பை: என்னை நைட்டியில் முதன்முதலாக பார்த்தது என் கணவர் சயிப் அலி கான் அல்ல சல்மான் கான் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

    கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கரீனா கபூர் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள பஜ்ரங்கி பாய்ஜான் படம் ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீஸ் ஆகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் அழகில் சல்மான் கான் சொக்கிவிட்டார்.

    அனைவரும் முடிந்தால் காஷ்மீருக்கு சென்று அதன் அழகை ரசியுங்கள் என்று தெரிவித்துள்ளார் சல்மான்.

    கரீனா

    கரீனா

    பஜ்ரங்கி பாய்ஜான் பட விழாவில் கலந்து கொண்ட கரீனா கபூர் சல்மான் கான் பற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில், என்னை முதன்முதலாக நைட்டியில் பார்த்தது என் கணவர் சயிப் அலி கான் அல்ல சல்மான் கான். அப்போது எனக்கு வயது 9 என்றார்.

    சல்மான்

    சல்மான்

    சல்மான் கானுக்கு கரீனாவை சிறு குழந்தையில் இருந்து தெரியும். கரீனா சிறுமியாக இருக்கையில் தனது அக்கா கரீஷ்மா கபூர் படங்களின் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்வார்.

    ரம்ஜான்

    ரம்ஜான்

    ரம்ஜான் பண்டிகைக்கும் சல்மான் கானுக்கும் அப்படி ஒரு ராசி. ரம்ஜான் அன்று ரிலீஸாகும் அவரது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ரம்ஜான் பண்டிகை அன்று பஜ்ரங்கி பாய்ஜான் ரிலீஸாக உள்ளது.

    பாடல்

    பாடல்

    பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் வரும் செல்பி லே லே ரே என்ற பாடல் ஏற்கனவே மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. இந்த படத்தில் சல்மானுக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலி கத்ரீனா கைஃப் நடிக்க வேண்டியது. ஆனால் சல்மான் தான் அவருடன் நடிக்க மாட்டேன் என்று கூறி கரீனாவின் பெயரை பரிந்துரை செய்தார்.

    English summary
    Kareena Kapoor told that the man who saw her first in night dress was not her husband Saif Ali Khan but it was Salman Khan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X