Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திலீப் மனைவியாக இருப்பதே போதும்... நடிப்புக்கு குட் பை! - காவ்யா மாதவன்
நடிகை காவ்யா மாதவன் சினிமாவிலிருந்து முழுமையாக ஒதுங்குவதாக, சமீபத்தில் திலீப்பை மணந்த நடிகை காவ்யா மாதவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் திலீப் முதலில் மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகள் கழித்துப் பிரிந்தார். அண்மையில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இரண்டாவதாக காவ்யா மாதவனை திலீப் மணந்தார். சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது. அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க காவ்யா மாதவன் ஒப்புக் கொள்ளவில்லை. பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதை அவர் தவிர்த்து வருகிறார்.
முதல் கணவரான நிஷால் சந்திராவை திருமணம் செய்ய இருந்த போதும் காவ்யா மாதவன் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்றார். அதற்கேற்ப நடிக்காமல் கணவருடன் வெளிநாட்டில் வசித்தார். இப்போது திலீப்பை மணந்த பிறகு மீண்டும் நடிப்புக்கு முழுக்குப் போட்டுள்ளார்.
'திலீப்பின் மனைவியாக இருப்பதே போதும்... நடிப்புக்கு இத்துடன் முழுக்குப் போடுகிறேன்,' என்று காவ்யா மாதவன் கூறினார்.