Don't Miss!
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆடக் கற்கும் கீர்த்தி
கலைஞரின் எழுத்து வண்ணத்தில் உருவாகும் உளியின் ஓசை படத்தில் நடிப்பதற்காக பரத நாட்டியத்தை நீக்கமறக் கற்க ஆரம்பித்துள்ளாராம் நாயகி கீர்த்தி சாவ்லா.
Click here for more images |
30 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி எழுதிய காவியம் உளியின் ஓசை. இது இப்போது படமாகிறது. இளவேனில் இயக்குகிறார், இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வினீத் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லா, அட்சயா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
படத்தின் கதைப்படி வினீத் சிற்பியாக வருகிறார், கீர்த்தி சாவ்லா பரதம் அறிந்த அழகியாக வருகிறார். கீர்த்திக்கு பரதம் ஓரளவு தெரியுமாம். இருந்தாலும் சமீப காலமாக அவரது திறமையை வெளிப்படுத்தும் வகையிலான வேடங்கள் கிடைக்காததால் பரதத்தை ஓரம்கட்டி வைத்திருந்தார். இதனால் பரதம் மறந்தே போய் விட்டதாம்.
இப்போது உளியின் ஓசை படத்தில் பரதம் முக்கியப் பங்கு வகிக்கப் போவதால், டச் விட்டுப் போன நடனத்தை பேச்சப் செய்து கொள்வதற்காக கலாஷேத்ராவில் பரத வகுப்புக்குப் போக ஆரம்பித்துள்ளாராம் கீர்த்தி.
ஏற்கனவே தெரிந்த டான்ஸ்தான் என்பதால் மறந்து போன பேசிக்குகளை மட்டும் கற்றுக் கொண்டிருக்கிறாராம் கீர்த்தி. அவரது உடல் வாகுக்கும், அழகுக்கும் பரதம் அற்புதமாக வருவதாக கலாஷேத்ராவில் பெருமையாக கூறுகிறார்கள்.
கலைஞரின் எழுத்தோசை, இசைஞானியின் இசையோசை இத்தோடு கீர்த்தியின் பரத ஓசையும் இணைந்து உளியின் ஓசை, படத்துக்கு உயிரோசையாக அமையும் என நம்பலாம்.