Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மறுபடியும் டிவியில் கௌசல்யா
செகண்ட் ரேங்க் முன்னணி நாயகர்களுடன் ஒரு ரவுண்டு அடித்தவர் கெளசல்யா. கன்னடத்திலிருந்து வந்த கெளசல்யா, தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் சொல்லிக் கொள்ளும்படியாக நடித்தவர்.
தாய் மொழியான கன்னடத்தை விட தமிழிலும், மலையாளத்திலும்தான் அவர் நிறையப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் நந்தினி என்ற பெயரில் நடித்து வந்தார் கெளசல்யா.
இடையில் அவருக்கு மார்க்கெட் தொய்ந்து போகவே டிவி பக்கம் திரும்பினார். மனைவி என்ற மெகா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார். பிறகு விஜய் டிவியில் வந்த ஒரு தொடரில் நடித்தார். அதன் பின்னர் பெங்களூருக்கே திரும்பிப் போய் விட்டார்.
இந்த நிலையில் பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் டிவிக்குத் திரும்பியுள்ளார் கெளசல்யா. ஜெயா டிவியில் டிசம்பர் 10ம் தேதி முதல் இரவு 8 மணி முதல் எட்டரை மணி வரை ஒளிபரப்பாகவுள்ள அலைபாயுதே என்ற புதிய மெகா சீரியலில் கெளசல்யாதான் நாயகி.
இரு சகோதரிகளுக்கு இடையிலான கதையாம் இது. இந்தத் தொடரின் பெரும் பகுதியை மலேசியாவில் ஷூட் செய்துள்ளனர் என்பது இந்தத் தொடரின் ஒரு சிறப்பம்சம்.
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ள முதலாவது பிரமாண்டத் தொடர் இது என்பது இன்னொரு விசேஷமாம்.
சின்னத்திரையில் 2வது இன்னிங்ஸை ஆரம்பிக்கும் கெளசல்யா இதிலும் வெற்றிக் கொடி நாட்ட ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளார்.