Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹீரோயின்
பிரியமுடன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கெளசல்யா, இப்போது திருமலை படத்தில் அவருக்குஅண்ணியாக படத்தில் நடிக்கிறாராம்.
முன்பெல்லாம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் பின்னாளில் அவருக்கு அம்மாவாக, அக்காவாக,அண்ணியாக நடித்துள்ளனர். அதேபோல ரஜினிக்கு ஜோடியாக நடித்த சில நடிகைகள் அவருக்கு அம்மாவாகநடித்துள்ளனர்.
அந்த பாரம்பரியத்தை இப்போதைய இளம் நடிகர்களில் முதல் முறையாக தொடங்கி வைத்துள்ளார் விஜய்.விஜய்யுடன் பிரியடன், நேருக்கு நேர் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த கெளசல்யா இப்போதுபெங்களூரில் உள்ள தனது வீட்டில் சும்மா இருக்கிறார்.
சொந்த மொழியான கன்னடமும் கை கொடுக்கவில்லை. இதனால் சோலை விளம்பரங்களில் நடித்துவிட்டுமலையாளத்தில் சில படங்களில் நடித்தார். அங்கும் நினைத்தபடி சான்ஸ்கள் வரவில்லை.
இதனால் சும்மா இருப்பதைவிட ஓல்டு கெட் அப் வேடங்களைச் செய்யத் தயாரான அவர் முதலில் முயற்சி செய்ததுதமிழில் தான். முயற்சிக்கு கை மேல் பலனான திருமலை பட சான்ஸ் கிடைத்துவிட்டது. இந்தப் படத்தில் விஜய்க்குஅண்ணியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அண்ணியாக நடிப்பதில் எந்த வருத்தம் எனக்கு இல்லை என்கிறார் கெளசல்யா, தொடர்ந்து அஜீத், பிரசாந்த்,சூர்யா என எல்லா இளம் நடிகர்களுக்கும் அண்ணி, அக்கா வேடத்தில் நடிக்கத் தயார் என்றும் கூறுகிறார்.
கெளசல்யாவுக்கு வருத்தம் இருக்கிறதோ இல்லையோ அவரது ரசிகர்கள், ரசிகைகளுக்கு இது நிச்சயம் வருத்தம்தரும் தான்.
எப்படியோ தமிழுக்கு இன்னொரு அழகிய அண்ணி கிடைத்துவிட்டார்.