Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
லீவில் சென்ற நீதிபதி: ஜாமீன் பெற முடியாமல் திரும்பிய குஷ்பு
நடிகை குஷ்பு சட்டசபை தேர்தலின் போது திமுகவை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டி ஆகிய ஊர்களிலும் பிரசாரம் மேற்கொண்டார்.
குஷ்பு தேர்தல் விதிகளை மீறி ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டியில் அதிக வாகனங்களைப் பயன்படுத்தியதாக அவர் மீது இரண்டு ஊர்களின் போலீசாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு குஷ்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவரை ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து குஷ்பு நேற்று காலை 10.30 மணிக்கு ஆண்டிபட்டி நடுவர் நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் நீதிபதி சுந்தரய்யா விடுமுறையில் சென்றுவிட்டார் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. பெரியகுளம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு வழக்கறிஞர்கள் ஆலோசனை கூறினர்.
ஆனால் அங்குள்ள நீதிபதி சங்கரும் விடுமுறையில் சென்றிருந்து தெரிய வந்ததால் ஏமாற்றம் அடைந்த அவர் பெரியகுளம் செல்லாமல் பகல் 12.30 மணி அளவில் சென்னைக்கே திரும்பினார்.
அப்போது குஷ்பு கூறியதாவது,
நீதிபதிகள் விடுமுறையில் சென்றுள்ளனர். அவர்கள் வந்த பிறகு நான் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வேன் என்றார்.