Just In
- 25 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
Don't Miss!
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- News
விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா?
- Sports
அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது?
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லீவில் சென்ற நீதிபதி: ஜாமீன் பெற முடியாமல் திரும்பிய குஷ்பு

நடிகை குஷ்பு சட்டசபை தேர்தலின் போது திமுகவை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டி ஆகிய ஊர்களிலும் பிரசாரம் மேற்கொண்டார்.
குஷ்பு தேர்தல் விதிகளை மீறி ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டியில் அதிக வாகனங்களைப் பயன்படுத்தியதாக அவர் மீது இரண்டு ஊர்களின் போலீசாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு குஷ்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவரை ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து குஷ்பு நேற்று காலை 10.30 மணிக்கு ஆண்டிபட்டி நடுவர் நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் நீதிபதி சுந்தரய்யா விடுமுறையில் சென்றுவிட்டார் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. பெரியகுளம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு வழக்கறிஞர்கள் ஆலோசனை கூறினர்.
ஆனால் அங்குள்ள நீதிபதி சங்கரும் விடுமுறையில் சென்றிருந்து தெரிய வந்ததால் ஏமாற்றம் அடைந்த அவர் பெரியகுளம் செல்லாமல் பகல் 12.30 மணி அளவில் சென்னைக்கே திரும்பினார்.
அப்போது குஷ்பு கூறியதாவது,
நீதிபதிகள் விடுமுறையில் சென்றுள்ளனர். அவர்கள் வந்த பிறகு நான் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வேன் என்றார்.