Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'அந்த 2 மணிநேர நரகம்': முதல்முறையாக மனம் திறந்து பேசிய நடிகை
திருவனந்தபுரம்: என்னை கடத்திய சம்பவம் பணத்திற்காக நடந்தது போன்று இல்லை. இதற்கு பின்னால் சதி உள்ளது என்று பிரபல மலையாள நடிகை தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது தனது முன்னாள் கார் டிரைவரால் கடத்தப்பட்டு 2 மணிநேரம் மானபங்கப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து அவர் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
துணிச்சல்
சினிமா நட்சத்திரங்களை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்லும் டிரைவருக்கு எப்படி கடத்தும் அளவுக்கு துணிச்சல் வந்தது? யார், எதற்காக, ஏன்? இந்த கேள்விகளுக்கு பதிலே கிடைக்கவில்லை.
சதி
சினிமா துறையில் உள்ள என் எதிரிகள் தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கிறார்கள் என்று நான் கூற மாட்டேன். இது பணத்திற்காக நடந்தது போன்று இல்லை. இதற்கு பின்னால் சதி உள்ளது.
போராடுவேன்
எனக்கு பல கேள்விகள் உள்ளன. அதற்கு சரியான பதில் தேவை. நான் ஜெயிக்கும் வரை போராடுவேன். அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இல்லை.
எதிரிகள்
எனக்கு சினிமா துறையில் நிரந்தர நண்பர்களும் உண்டு, எதிரிகளும் உண்டு. நான் செய்யாத தவறுக்கு ஒருபோதும் மன்னிப்பு கேட்டது இல்லை. இது எனக்கு நடந்தால் யாருக்கும் வேண்டுமானாலும் நடக்கலாம். இது குறித்து என்னால் வெளியே பேச முடிந்தது என்றால், அனைவராலும் முடியும்.
அமைதி
எனக்கு நடந்தது போன்ற சம்பவம் நடந்தால் தயவு செய்து அதை மூடி மறைக்காதீர்கள். குற்றவாளிகள் தப்ப நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? பெண்கள் அல்ல குற்றம் செய்தவர்கள் தான் வலியை அனுபவிக்க வேண்டும்.
சம்பவம்
இந்த சம்பவத்தை நான் மூடி மறைக்க நினைத்திருந்தால் இது குறித்து ஒரு 10 பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். நான் வாழ்நாள் முழுவதும் வேதனையுடன் வாழ்ந்திருப்பேன்.