மறுபடியும் மல்லிகா கபூர்

By Staff
Click here for more images
சின்ன இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் நடிக்க வருகிறார் மல்லிகா கபூர்.

அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது மூலம் தமிழில் நடிக்க வந்தவர் மல்லிகா கபூர். பிறகு அற்புதத் தீவிலும் குள்ள நடிகர்களுடன் கலகலக்க வைத்தார்.

எல்லாம் சீரும் சிறப்புமாக இருந்தும் மல்லிகா கபூருக்கு தமிழில் சரிவர வாய்ப்புகள் இல்லை. இதனால் தெலுங்குக்கும், தமிழுக்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் புதிதாக ஒரு படம் அவரைத் தேடி வந்துள்ளது.

ஷாம் நாயகனாக நடிக்கும் அந்தோணி - யார்? என்ற படத்தில் மல்லிகா கபூர் திறமை காட்டவுள்ளார். இப்படத்தின் கதை சற்றே வித்தியாசமானது.

கடலோர கிராமத்தில் ஒரு குழந்தை கட்டுமரத்தில் வந்து ஒதுங்குகிறது. ஊர் மக்கள் அக்குழந்தையை எடுத்து வளர்க்கின்றனர். அங்குள்ள அந்தோணியார் கோவில் அருகே குழந்தை கிடைத்ததால், அக்குழந்தைக்கு அந்தோணி என்று பெயர் இடுகின்றனர். வளர்ந்து, வாலிபனாகும் அக்குழந்தையும் மீனவனாகிறது.

அந்த அந்தோணி யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதையாம். இப்படத்தில் மல்லிகாவுக்கு நடிப்புக்கேற்ற கேரக்டராம். கிளாமரும் படத்தில் இருக்கிறதாம்.

மல்லிகா தவிர காணாமல் போன பிரகதியும் படத்தில் இருக்கிறார். இவருக்கு 2வது நாயகி வேடமாம்.

இயக்குநர் செல்வாவின் உதவியாளர் பாண்டி இப்படத்தை இயக்கி அறிமுகமாகிறார். தினா இசையமைக்கிறார். கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X