Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹீரோயின்
பளிச் சென்று முகமும், இயல்பான நடிப்பும் இருந்ததால் இயற்கை படம் எதிர்பார்த்த அளவு ஓடாவிட்டாலும் கூட, வர்ணஜாலம்உள்பட பல படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் அவரது துரதிஷ்டம், அடுத்து வந்த வர்ணஜாலமும் ஒப்பேறவில்லை. இதையடுத்துஇவரை வைத்து படமெடுக்க இருந்த தயாரிப்பாளர்கள் ப்ராஜெக்ட்களை கைவிட்டுவிட இப்போது ராதிகாவின் கைவசம் மீசைமாதவன் மட்டுமே உள்ளது.
இந்தப் படமாவது கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் குட்டி ராதிகா.
பாவம், பிரியாமணி
ராதிகாவைப் போலவே கவலையில் இருக்கும் இன்னொருவர் பிரியா மணி. கண்களால் கைது செய் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஏகப்பட்ட வாய்ப்புக்கள் இவரைத் தேடி வந்தன. முதல் படமே பாரதிராஜாவின் படம் என்பதால் அதுமிகப் பெரிய வெற்றி பெறும், ஒரு ரவுண்ட் வரலாம் என்று நம்பியிருந்தார் பிரியாமணி
ஆனால், கண்களால் கைது செய் படத்தின் தோல்வி பாரதிராஜாவைவிட பிரியாமணியை மிகவும் பாதித்துவிட்டது. இப்போது இவரைத்தேடி எநத்த் தயாரிப்பாளரும் வரக் காணோம். அட்வான்ஸ் கொடுத்தவர்கள் அத்தோடு நிறுத்திக் கொண்டுவிட்டனர். இவர் புக்செய்யப்பட்ட எந்தப் படத்தின் சூட்டிங்கும் தொடங்கவில்லை.
தனுசுக்கு ஜோடியாக இவர் நடந்து கொண்டிருந்த பாலுமகேந்திரா படத்தின் சூட்டிங்கும் நின்று போய்விட்டது.
மேலும் க.கை.செய் படத்தின் ஹீரோ வசீகரனுடன் பிரியாமணிக்கு பிரியம் ஏற்பட்ட இருவரும் வெளிப்படையாகவே சுற்றஆரம்பித்ததால் பிற இளம் ஹீரோக்கள் பிரியாவுடன் நடிக்க விரும்பவில்லை. இதனால் பெங்களூரில் போய் ஓய்வெடுத்தவர்இப்போது திரும்பி வந்துள்ளார்.
கோடம்பாக்கத்தின் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி வருகிறார். கவர்ச்சியான வேடம் என்றாலும் சரி, வெளுத்துக்கட்டுகிறேன், ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று வாய்விட்டு கேட்டு வருகிறார்.