அதெல்லாம் பர்சனல்... மீடியா பேசக்கூடாது!- சமந்தா கோபம்
சித்தார்த்துடனான எனது உறவு தனிப்பட்ட விஷயம். இதைப் பற்றி மீடியாக்கள் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை சமந்தா கூறினார்.
சித்தார்த் - சமந்தா இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமான உறவு நிலவியது.
ஆனால் சில மாதங்களுக்கு முன் இருவரும் திடீரென பிரிந்துவிட்டனர். இது மீடியாவில் பெரிய செய்தி ஆனது.
இன்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இருவரின் பிரிவு குறித்தும் பெரிய செய்தி வெளியிட கொந்தளித்துள்ளார் சமந்தா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஏதோ நான்தான் குற்றவாளி என்பதைப் போல அந்த செய்தியில் எழுதியிருக்கிறார்கள். என் மீது எந்தத் தவறும் இல்லை. மேலும் சித்தார்த் ஒரு சிறந்த மனிதர். எங்கள் இருவரின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றிப் பேசுவதை மீடியா உடனே நிறுத்த வேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications












