மேக்னாவுக்கு டும் டும்?
மேக்னா நாயுடுவுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாம். இருந்தாலும் அந்த மேட்டரை படு ரகசியமாக வைத்துள்ளனராம் அவரது குடும்பத்தினர்.
மலையாளத்தில் அவ்வப்போது நடித்தாலும் கூட தொடர்ந்து தமிழில் நடிக்க படு தீவிரமாகவும், ஆர்வமாகவும் உள்ளார் மீரா ஜாஸ்மின். அதிலும் திருமகன் படத்தில் தனது நடிப்பு பலரையும் கவர்ந்து விட்டதால், அவரது தமிழ்ப் பட ஆர்வம் பன்மடங்கு பெருகியுள்ளதாம்.இருந்தாலும் மீராவுக்குள் ஒரு கோபம் கலந்த ஆதங்கம் அதிகமாகவே இருக்கிறதாம். அதாவது, தனக்கு வெகுளித்தனமான, விளையாட்டுத்தனம் மிக்க, அரைவேக்காட்டுத்தனமான ரோல்களாகவே வருவதாக புலம்புகிறார் மீரா.
என்னைப் பார்த்தால் லூசு மாதிரியா தெரிகிறது. ஏன் அப்படிப்பட்ட கேரக்டர்களாகவே எனக்குக் கொடுக்கிறார்கள் என நெருங்கியவர்களிடம் புலம்புகிறாராம் மீரா. புதிய கீதை(விஜய் படம்)படத்தில் எனது கேரக்டரை கிட்டத்தட்ட லூசுத்தனமாகவே மாற்றியிருந்தனர். பின்னர் வந்த படங்களிலும் அதுபோலவே கேரக்டரை அமைத்தனர்.
பரட்டை என்கிற அழகுசுந்தரத்திலும் கூட கிட்டத்தட்ட வெகுளிப் பெண் வேடம்தான். எனக்கே அலுத்து விட்டது இப்படிப்பட்ட கேரக்டர்களில் நடித்து என்று அலுத்துக் கொள்கிறாராம் மீரா.
இப்போது பரட்டையும் அத்து விட்டு விட்டதால் மீராவின் நிலைமை சோகமாகியுள்ளதாம். இருந்தாலும் தொடர்ந்து தமிழில்தான் அதிக கவனம் செலுத்தப் போகிறாராம் மீரா.
மீரா, கவலையை மறந்து நடிங்க ஜோரா


Click it and Unblock the Notifications











