Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஹீரோயின்
நவ்யா நாயர் நடித்துக் கொண்டிருக்கும் அழகிய தீயே படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
மலையாளத்தில் சம்சாரித்துக் கொண்டிருந்த நவ்யா நாயரை அழகிய தீயே படத்துக்காக தமிழுக்கு அழைத்துவந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். ஆர்ப்பாட்டமில்லாத அழகு, பேசும் கண்கள் என அசத்துகிறார் நவ்யா.மலையாளத்தில் ஆறேழு ஹிட் படங்களைக் கொடுத்து, முன்னணியில் இருந்த இவருக்கு ஆசையெல்லாம் தமிழ்மீது இருக்க பிரகாஷ்ராஜ் மூலம் வாய்ப்பு கிடைத்தது.
பைவ் ஸ்டார், ரகசியமாய் ஆகிய படங்களில் நடித்த பிரசன்னாதான் இந்தப் படத்தில் அழகிய தீயே என்று நவ்யாநாயரைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பெரியார்தாசன், பிரமிட் நடராஜன்,தேவதர்ஷினி, ஷர்மிலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
முதலில் கூத்துப்பட்டறை என்று பெயரிட்டு பின்னர் அதை எல்லாமே டிராமாதான் என்று மாற்றி, இப்போதுஅதையும் மாற்றி அழகிய தீயே என்று பெயர் வைத்துள்ளார்கள்.
பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் ராதாமோகன்.இவரது கதை, திரைக்கதைக்கு ரமேஷ் விநாயகம் இசையமைக்கிறார்.
மைசூர், மங்களூர், புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படத்திற்கு பின்னணிஇசை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் திரைக்குக் கொண்டு வர மொத்த யூனிட்டும் மும்முரமாகஉள்ளது.
இந்தப் படம் தமிழில் நல்ல பெயரைத் தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நவ்யா.
கேரளத்திலிருந்து தமிழுக்கு வந்த காவ்யா மாதவன், திவ்யா உன்னி, சம்யுக்தா வர்மா, அபிராமி, மீரா ஜாஸ்மின்,கோபிகா உள்ளிட்ட நடிகைகள் யாரும் நடிப்பிலோ, அழகிலோ சோடை போனதில்லை. ஆனால் என்னகாரணத்தினாலோ பத்மினி, கே.ஆர்.விஜயா, ரேவதியைத் தவிர சமீப காலங்களில் தமிழுக்கு வந்த மலையாளநடிகைகளால் கோடம்பாக்கத்தில் நிலையான இடத்தைப் பிடிக்க முடிவதில்லை.
நவ்யா நாயராவது பிடிப்பாரா என்று பார்ப்போம்.