Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிக்கிய நயனதாரா-சில்மிஷ வீடியோ!
மாணவர்கள் கூட்டத்தில் நயனதாரா அவஸ்தைப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் இணைய தளங்களில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நயனதாரா சம்பந்தப்பட்ட ஏடா கூட காட்சிகள் இணைய தளங்களில் வெளியாவது புதிதல்ல. முன்பு சிம்புவும், நயனதாராவும் படு நெருக்கமாக முத்தம் கொடுத்துக் கொள்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.இந்த புகைப் படங்களை சிம்புதான் வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்துகிறார் என்று நயனதாரா குற்றம் சாட்டினார். இந் நிலையில் நயனதாரா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆந்திர தேசத்தில் படப்பிடிப்புக்காக போன இடத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சிக்கி நயனதாரா நசுங்கிய காட்சிகள்தான் இவை.
சிம்புவுடனான மோதலைத் தொடர்ந்து தமிழை விட்டு விட்டு தெலுங்குக்குப் போனார் நயனாரா. அதில் ஒரு படத்தின் ஷூட்டிங்குக்காக ஒரு கிராமத்திற்குச் சென்றார். அங்குள்ள பள்ளிக்கூடத்தில்தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
நயனதாரா வருவதை அறிந்ததும் அந்தப் பள்ளியின் மாணவர்கள் திரண்டு விட்டனர். அதேபோல, உள்ளூர் விடலைப் பசங்களும், வாலிப, வயோதிகர்களும் நயனதாராவைக் காண ஆர்வத்தோடு காத்திருந்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக கொஞ்சம் போல போலீஸார் நின்றிருந்தனர். நயனதாரா தனது உதவியாளர்கள் புடை சூழ காரில் வந்து இறங்கினார்.
கவர்ச்சியைத் தூக்கிக் காட்டும் கருப்பு நிற டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் பேண்ட்டில் வந்த நயனதாராவைப் பார்த்ததும் கூட்டத்திற்கு உற்சாகம் பீறிட்டது.
அதுவரை அமைதியாக இருந்த அவர்கள், படு வேகமாக நயனதாராவை நோக்கி பாய்ந்து வந்தனர். அவர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த காவலர்களால் முடியவில்லை.
இதையடுத்து கூட்டத்தினர் மத்தியில் சிக்கிக் கொண்டார் நயனாரா. அங்கிருந்து தப்ப முயன்ற அவரால் அது முடியாமல் போனது. நயனதாராவை இவ்வளவு நெருக்கத்தில் பார்க்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருந்த அந்த கூட்டத்தினருக்கு, தங்களது கைக்கு எட்டிய தூரத்தில் அவர் கிடைத்ததும் ஜாலியாகி விளையாட தொடங்கி விட்டனர்.
நயனதாராவின் உடல் முழுவதும் தாறுமாறாக கையை வைத்து சில்மிஷம் செய்ய அவர்களிடமிருந்து விலக முடியாமல் நயனாரா அவஸ்தைக்கு ஆளாகினார். நயனதாராவின் உடல் மீது ஒரு இளைஞர் கைகளால் விளையாடும் அந்த வக்கிரக் காட்சியை வீடியோவில் எடுத்துள்ளனர். செல்போன் கேமரா மூலம் இது எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தக் காட்சிதான் இப்போது இணைய தளங்கள் சிலவற்றில் உலா வந்து கொண்டுள்ளது. இதை பலரும் எஸ்.எம்.எஸ் மூலம் பலருக்கும் அனுப்பி புளகாங்கிதமடைந்து வருகின்றனர்.
குறிப்பிட்ட நாயகன் ஒருவரின் ரசிகர்களும் தங்கள் பங்குக்கு முன்னாள் அண்ணியின் இந்த அவஸ்தை வீடியோவை அனுப்பி பழி தீர்த்துக் கொள்வதாகவும் கேள்வி.
காவல்துறை சுதாரித்து உடனடி நடவடிக்கையில் இறங்கி இந்த வக்கிர வீடியோ காட்சிகளை தடை செய்ய நடவடிக்கை எடுத்தால் புண்ணியமாகப் போகும்.