Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நயனுக்கு வாசு வைத்த ஆப்பு! வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என்பார்கள். ஆனால் இயக்குனர் பி.வாசுவைநெஞ்சில் ஏறி மிதித்தே விட்டதாம் இந்தக் கடா .அவரால் சந்திரமுகியில் அடையாளம் காட்டப்பட்ட நயனதாரா கடுப்படித்து,இழுத்தடித்ததால், தான் இயக்கப் போகும் தெலுங்குப் படத்திலிருந்து நயனதாராவைத்தூக்கி எறிந்து விட்டு, அவருடைய இடத்தில் மீரா ஜாஸ்மினைப் போட்டுள்ளாராம்வாசு.சரத்குமாரின் ஐயா மூலம் அறிமுகமாயிருந்தாலும் கூட சந்திரமுகிதான்நயனதாராவுக்கு வாழ்க்கையை தூக்கிவிட்டு சூப்பர் ஹீரோயினி ஆக்கியது.அந்தப் படத்திற்குப் பிறகுதான் நயனாவுக்கு தமிழ் சினிமாவில் பெரும் கிராக்கிஏற்பட்டது. தனக்கு கிடைத்த இந்தப் புகழுக்கு இயக்குனர் வாசுதான் காரணம் எனநயனதாரா வாயாரப் பாராட்டி வந்தார். இந் நிலையில் வாசுவுக்கு தெலுங்கில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.ஓட்டு போல்டான என்.டி.ஆர். பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்க உருவாகும்இப்படத்தில் நயனதாராதான் நாயகியாக்க வேண்டும் என்று ஹீரோ சொல்லிவிட்டார்.வாசுவும், அட இது நம்ம பொண்ணாச்சே என்று அவரை உடனே ஒப்பந்தம் செய்தார்.ஆனால் அவரது போக்கைப் பார்த்து வாசு வெறுத்துப் போய் விட்டாராம்.படத்தின் கதை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டிஸ்கஷனுக்குக்கூப்பிடும்போதெல்லாம் நயனதாரா வராமல் இழுத்தடித்தாராம். மேலும் கொடுத்தகால்ஷீட்டிலும் சொதப்பல்ஸ் செய்துள்ளார்.எப்போது தொடர்பு கொண்டாலும் நான் அங்கே இருக்கிறேன், இங்கே இருக்கிறேன்என்று பீலா விட்டுள்ளார் (அப்போதெல்லாம் சிம்புவுடன் இருந்திருப்பாரோ!) பொறுத்துப் பார்த்த பி.வாசு பொங்கி எழுந்தார். நயனதாராவை தூக்கி விட்டு அவரதுகேரக்டரில் மீரா ஜாஸ்மினைப் போட்டு விட்டார்.வாசு என்ன சொன்னாலும் கேட்கிறாராம் மீரா. இதனால் அவரை வாசுவுக்குரொம்பவும் பிடித்துப் போய் விட்டதாம். மீராவை வைத்து ஷூட்டிங்கை தொடங்கிவேகமாகப் போக ஆரம்பித்துள்ளார் வாசு.இப்படத்தில் இன்னொரு நாயகியும் உண்டு. அவர் ஸ்னேகா. இதில் காமெடிஎன்னவென்றால் கிளாமர் ரோலுக்காகத்தான் ஸ்னேகாவை போட்டுள்ளார்களாம்.கிளாமர் போர்ஷனையும் முழுக்க முழுக்க ஸ்னேகாவே ஆக்கிரமிக்கப் கொள்கிறாராம். மீராவுக்கு நடிக்க மட்டும்தான் வாய்ப்பாம்.முதலில் நயனதாரா இல்லாததால் வருத்தப்பட்ட ஹீரோ, ஸ்னேகா கதைக்குள்வந்தவுடன் சமாதானமாகிவிட்டாராம்.இந்தக் கதை நல்லாக் கீதுங்கோ!
வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என்பார்கள். ஆனால் இயக்குனர் பி.வாசுவைநெஞ்சில் ஏறி மிதித்தே விட்டதாம் இந்தக் கடா .
அவரால் சந்திரமுகியில் அடையாளம் காட்டப்பட்ட நயனதாரா கடுப்படித்து,இழுத்தடித்ததால், தான் இயக்கப் போகும் தெலுங்குப் படத்திலிருந்து நயனதாராவைத்தூக்கி எறிந்து விட்டு, அவருடைய இடத்தில் மீரா ஜாஸ்மினைப் போட்டுள்ளாராம்வாசு.
சரத்குமாரின் ஐயா மூலம் அறிமுகமாயிருந்தாலும் கூட சந்திரமுகிதான்நயனதாராவுக்கு வாழ்க்கையை தூக்கிவிட்டு சூப்பர் ஹீரோயினி ஆக்கியது.
அந்தப் படத்திற்குப் பிறகுதான் நயனாவுக்கு தமிழ் சினிமாவில் பெரும் கிராக்கிஏற்பட்டது. தனக்கு கிடைத்த இந்தப் புகழுக்கு இயக்குனர் வாசுதான் காரணம் எனநயனதாரா வாயாரப் பாராட்டி வந்தார்.
இந் நிலையில் வாசுவுக்கு தெலுங்கில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.ஓட்டு போல்டான என்.டி.ஆர். பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்க உருவாகும்இப்படத்தில் நயனதாராதான் நாயகியாக்க வேண்டும் என்று ஹீரோ சொல்லிவிட்டார்.
வாசுவும், அட இது நம்ம பொண்ணாச்சே என்று அவரை உடனே ஒப்பந்தம் செய்தார்.ஆனால் அவரது போக்கைப் பார்த்து வாசு வெறுத்துப் போய் விட்டாராம்.
படத்தின் கதை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டிஸ்கஷனுக்குக்கூப்பிடும்போதெல்லாம் நயனதாரா வராமல் இழுத்தடித்தாராம். மேலும் கொடுத்தகால்ஷீட்டிலும் சொதப்பல்ஸ் செய்துள்ளார்.
எப்போது தொடர்பு கொண்டாலும் நான் அங்கே இருக்கிறேன், இங்கே இருக்கிறேன்என்று பீலா விட்டுள்ளார் (அப்போதெல்லாம் சிம்புவுடன் இருந்திருப்பாரோ!)
பொறுத்துப் பார்த்த பி.வாசு பொங்கி எழுந்தார். நயனதாராவை தூக்கி விட்டு அவரதுகேரக்டரில் மீரா ஜாஸ்மினைப் போட்டு விட்டார்.
வாசு என்ன சொன்னாலும் கேட்கிறாராம் மீரா. இதனால் அவரை வாசுவுக்குரொம்பவும் பிடித்துப் போய் விட்டதாம். மீராவை வைத்து ஷூட்டிங்கை தொடங்கிவேகமாகப் போக ஆரம்பித்துள்ளார் வாசு.
இப்படத்தில் இன்னொரு நாயகியும் உண்டு. அவர் ஸ்னேகா. இதில் காமெடிஎன்னவென்றால் கிளாமர் ரோலுக்காகத்தான் ஸ்னேகாவை போட்டுள்ளார்களாம்.கிளாமர் போர்ஷனையும் முழுக்க முழுக்க ஸ்னேகாவே ஆக்கிரமிக்கப் கொள்கிறாராம்.
மீராவுக்கு நடிக்க மட்டும்தான் வாய்ப்பாம்.
முதலில் நயனதாரா இல்லாததால் வருத்தப்பட்ட ஹீரோ, ஸ்னேகா கதைக்குள்வந்தவுடன் சமாதானமாகிவிட்டாராம்.
இந்தக் கதை நல்லாக் கீதுங்கோ!
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!