Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிரஞ்சீவியோட நடிக்கணுமா.. அப்ப 3 கோடி கொடுங்க!- அலற வைத்த நயன்தாரா
சிரஞ்சீவியின் 150 வது படத்தில் நடிக்க ரூ 3 கோடியை சம்பளமாகக் கேட்டு அதிர வைத்துள்ளார் நயன்தாரா.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாராதான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அவர்தான் இப்போது டாப்பில் உள்ளார்.
தமிழில் ஏற்கெனவே சிம்புவுடன் நடிக்க ரூ 3 கோடி வரை நயன்தாரா கேட்க, 2.50 கோடிக்கு இறுதியாக ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கில் அரசியலிருந்து மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ள சிரஞ்சீவி, தனது 150 படத்தில் நடிக்கிறார்.
இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அழைத்துள்ளனர். வாய்ப்பை ஏற்றுக் கொள்வதாகக் கூறிய நயன், தனக்கு சம்பளமாக ரூ 3 கோடி தரவேண்டும் என்றும், அதைக் குறைத்துக் கொள்ள முடியாது என்றும் கறாராகக் கூறிவிட்டாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர், நயன்தாராவையே நடிக்க வைக்கலாமா, த்ரிஷா, காஜல் போன்ற வேறு நாயகிகளை அணுகலாமா என யோசித்து வருகிறாராம்.