மீண்டும் எக்மோர் வீட்டுக்கே திரும்பிய நயன் தாரா!
எக்மோர் அருகே ஒரு காஸ்ட்லி அபார்ட்மெண்டில் வீடு வாங்கினார் நயன் தாரா. தன் காதலர் விக்னெஷ் சிவனோடு அங்கேதான் வசித்து வந்தார்.
என்ன ஆயிற்றோ திடீர் என்று சில நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறி ஒரு நட்சத்திர ஹோட்டலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினார்.

உடனே விக்னேஷ் சிவனுடனான காதல் முறிந்தது என செய்தி வந்தது. அதன் பின்னர் சிகிச்சையில் இருக்கிறார் என்றும் தகவல் வந்தது. வேலைக்காரன் ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயம் என்றார்கள்.
நேற்று முன் தினம் நயன் தாரா ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு எக்மோர் வீட்டுக்கே திரும்பி விட்டாராம்.
போயஸ் கார்டனிலும் அப்போலோவிலும் என்ன நடந்தது என்றுகூடத் தெரிந்துவிடும்... ஆனால் நயன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்ற மர்மம் வெளியே வராது போல... சிம்பு, பிரபுதேவா, ஆர்யா ஆகியோரை பிரிந்ததற்கான காரணமே இன்னும் தெரியவில்லையே!
Comments


Click it and Unblock the Notifications