Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காஷ்மோரா... திமிர் பிடித்த ராணியாக நயன்தாரா!
கார்த்தி, நயன் தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'இதற்குதானே ஆசைப்பட்டாய்' கோகுல் இயக்கும் படம் காஷ்மோரா. இதுவரை வெளியான கார்த்தி படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படுவது காஷ்மோராதான். ஏற்கெனவே நாம் சொல்லியிருந்தது போல இது ஒரு பில்லி சூனிய கதை என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார் கோகுல்.
படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு ஹீரோயின்கள் இருப்பதால் யார் கார்த்திக்கு ஜோடி என்பது சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். நயன்தாராவுக்கு இதில் திமிர் பிடித்த ராணி கேரக்டராம். ஃப்ளாஷ்பேக்கில்தான் சரித்திர போர்ஷன் வருகிறது. எனவே இப்போது நடக்கும் கதையில் கார்த்திக்கு நயன்தாரா ஜோடியாகவும் ராஜா காலத்து கதையில் கார்த்திக்கு நயன்தான் வில்லி என்றும் சொல்கிறார்கள்.
நடிகர் விவேக் இதில் கார்த்திக்கு அப்பாவாக நடிக்கிறார். ஸ்ரீதிவ்யாவுக்கு துப்பறியும் நிருபர் கேரக்டராம். இவர்களைத் தவிர வழக்கு எண் மனீஷாவும் படத்தில் இருக்கிறார்.
கார்த்திக்கு மொத்தம் மூன்று கேரக்டர்கள் என்கிறார்கள். இப்போதுதான் சூர்யா மூன்று கேரக்டர்களில் 24 படத்தில் நடித்தார். இது தம்பி டர்ன்!