Just In
- 19 min ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 39 min ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
- 1 hr ago
செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்!
Don't Miss!
- Sports
இவங்களை எதுவும் செய்ய முடியலை.. விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா.. கையில் எடுத்த "அந்த" மோசமான யுக்தி!
- News
டெல்லி டிராக்டர் பேரணிக்கு உ.பி. விவசாயிகள் ரெடி..பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க முடிவு!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Finance
பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான் ஒழுக்கமான நடிகை... தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா கடும் கோபம்

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலட்சுமியை அடித்து காயப்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையடுத்து கணவர் மீது போலீசில் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். தர்ஷனுக்கும் நடிகை நிகிதாவுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக விஜயலட்சுமி குற்றம் சாட்டினார்.
இப்பிரச்சினை குறித்து கன்னட தயாரிப்பாளர் சங்கம் நேற்று விவாதித்து, தர்ஷன் குடும்ப பிரச்சினைக்கு காரணமான நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் நடிக்க தடை விதித்துள்ளது.
இந்தத் தடையை கடுமையாக எதிர்த்துள்ளார் நிகிதா.
அவர் கூறுகையில், "தர்ஷனுக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்குமான குடும்ப சண்டையில் நான் தேவை இல்லாமல் இழுக்கப்பட்டு உள்ளேன். என் பெயரை களங்கப்படுத்திவிட்டனர். நான் ஒழுக்கமான நடிகை. தர்ஷனுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது அவதூறானது.
நான் சினிமாவில் ஆறு வருடங்களாக இருக்கிறேன். இதுவரை எந்த நடிகருடனும் என்னை இணைத்து பேசியது இல்லை. கன்னட படத்தில் சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளேன். இங்குள்ள ரசிகர்கள் என் மேல் பிரியம் வைத்துள்ளனர். அப்படிப்பட்ட என்னைப் பற்றி அவதூறு செய்திகள் வருகின்றன.
தர்ஷனுக்கும் எனக்கும் காதல் இருந்ததாக ஏதேனும் ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா? போலீசில் விஜயலட்சுமி அளித்த புகாரில் எனது பெயரை தேவை இல்லாமல் இழுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சியானேன். மூன்று வாரங்களுக்கு முன்பு கூட விஜயலட்சுமி என்னுடன் டெலிபோனில் பேசினார். நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்து விசாரித்தார்.
நான் திறமையாக நடிப்பதாக பாராட்டினார். அப்படிப்பட்டவர் என் மேல் புகார் அளித்துள்ளது வியப்பாக உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் நான் நடிப்பதற்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. தவறு செய்யாத என்னை தண்டித்து உள்ளனர். இப்பிரச்சினையை சட்டப்படி சந்திப்பேன். என் பக்கம் நியாயம் உள்ளது. யாரோ ஒருவர் வீட்டில் குடும்பப் பிரச்சினை என்பதற்காக, நான் நடிக்கக் கூடாது என்பது என்ன நியாயம்?," என்றார்.