Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நான் திமிர் பிடிச்சவ, நீ பார்த்த...? கோபத்தில் நித்யா மேனன்
சென்னை: நான் என்னை தேடி வரும் அனைத்து பட வாய்ப்புகளையும் ஏற்பது இல்லை. அதனால் என்னை திமிர் பிடித்தவள், தலைக்கனம் பிடித்தவள் என்கிறார்கள் என்று நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். தற்போது அவர் டோலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார். நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த நடிகை என்ற பேச்சு உள்ளது.
இது குறித்து நித்யா கூறுகையில்,
நடிகை
நான் நடிகையாவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. சிறு வயதில் இருந்தே எங்கு அநியாயம் நடந்தாலும் எனக்கு கோபம் வரும். அநியாயங்களை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல பத்திரிகையாளர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் விதி என்னை நடிகையாக ஆக்கிவிட்டது.
திமிர்
நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்தவர், அகம்பாவம், தலைக்கனம் உள்ளவர் என்று பலர் என் பின்னால் பேசுவது எனக்கு தெரியாமல் இல்லை. சினிமாவில் நடித்து தான் வாழ வேண்டும் என்று இல்லை.
கதை
என்னை தேடி வரும் வாய்ப்புகளில் நல்ல கதையம்சம் கொண்டவைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். அதை வைத்து தான் எனக்கு தலைக்கனம் என்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
பாடகி
நான் சிறு வயதில் இருந்தே விழாக்களில் பாடி உள்ளேன். படங்களிலும் பாட வாய்ப்பு வருகிறது. நடிகை, பாடகி ஆகிய இரண்டில் எனக்கு பாடகியாக இருக்கவே மிகவும் விருப்பம் என்கிறார் நித்யா.