Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கல்லூரியில் ‘காதல் கண்மணியாக’ வலம் வந்த நித்யாமேனன்
சென்னை: கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு இளைஞரைக் காதலித்ததாகவும், அந்தக் காதல் அப்போதே முடிந்து விட்டதாகவும் கூறியுள்ளார் நடிகை நித்யாமேனன்.
வெப்பம், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். கேரளாவைச் சேர்ந்த இவர் தனது திறமையான நடிப்பால் தமிழிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.
சவாலான கதை மற்றும் தனது கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பதால் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள போதும், திறமையான நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
நிஜக்காதல்...
மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் காதலில் கசிந்துருகும் பெண்ணாக நடித்திருந்த நித்யாமேனனின் நிஜவாழ்க்கையிலும் அப்படி ஒரு காதல் இருந்ததாம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவரைக் காதலித்தாராம் நித்யாமேனன்.
அது பழைய கதை...
ஆனால், அந்தக் காதல் அப்போதே முடிந்து விட்டதாம். நடிக்க வந்த பிறகு அவர் யாரையும் காதலிக்கவில்லையாம்.
நம்பிக்கை...
அதே சமயம் இனிமேல் காதல் வருமா, வராதா? என்பது குறித்தும் உறுதியாக கூற இயலாது எனத் தெரிவித்துள்ளார் நித்யாமேனன். எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும் என்பது தான் நித்யாமேனனின் நம்பிக்கையாம்.
புதிய படங்கள்...
நித்யாமேனன் நடிப்பில் ருத்ரமாதேவி மற்றும் அப்பாவின் மீசை ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இது தவிர மலையாளப் படம் ஒன்றில் இரண்டு குழந்தைகளின் தாயாக நடிக்க நித்யாமேனன் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.