Don't Miss!
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோடு MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- News
இரட்டை இலை -அதிமுகவின் எந்த கோஷ்டிக்காவது கிடைக்குமா?முடங்குமா? உச்சநீதிமன்றத்தில் நாளை க்ளைமாக்ஸ்!
- Technology
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நான் 2 புள்ளைகளுக்கு அம்மா, என்னை விட்டுடுங்க: இயக்குனரிடம் கூறிய பிரபல நடிகை
மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை மாதுரி தீக்சித் பற்றிய விபரங்கள் இருக்காதாம்.
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி படமாக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத்தாக ரன்பிர் கபூர் நடிக்கிறார். ரன்பிர் தனது கதாபாத்திரமாக நடிப்பதை சஞ்சய் ஏற்கனவே கிண்டல் செய்துள்ளார்.

சஞ்சய் தத் பெரிய ஸ்டார் ஆனது, போதை-மது பழக்கத்தில் சிக்கியது, பெண்கள் தொடர்பு, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்து சிறைக்கு சென்றது ஆகிய விபரங்கள் படத்தில் இருக்குமாம்.
பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித் 1990களில் சஞ்சய் தத்தை காதலித்தார். டாக்டர் ஒருவரை திருமணம் செய்து இரண்டு மகன்களுக்கு தாயான மாதுரி தன்னை பற்றிய விபரத்தை படத்தில் வைக்க வேண்டாம் என ஹிரானிக்கு கோரிக்கை விடுத்தாராம்.

இதையடுத்து படத்தில் இருந்து மாதுரியின் விபரங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாம். சஞ்சய் தத் படத்தில் சோனம் கபூர் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்கிறார்கள். படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடப்படுமாம்.