Don't Miss!
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நெறையா எதிர்பார்த்தேன், கோலிவுட்டில் யாருமே கண்டுக்கவில்லை: ஒரு நடிகையின் கவலை
சென்னை: தன்னை கோலிவுட்டில் யாருமே கண்டுகொள்ளவில்லை என நடிகை இஷா தல்வார் கவலை தெரிவித்துள்ளார்.
சிவா நடித்த தில்லு முல்லு ரீமேக் படம் மூலம் கோலிவுட் வந்தவர் மும்பையை சேர்ந்த இஷா தல்வார். அவரது தந்தை பாலிவுட் இயக்குனர் ஆவார். 3 ஆண்டுகள் கழித்து இஷா மீண்டும் ஒரு காதல் கதை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,
கோலிவுட்
தில்லு முல்லு படம் ரீமேக்கிற்கு பிறகு கோலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை. தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசை உள்ளது.
சம்பளம்
நான் அதிக சம்பளம் கேட்பதாக யாரோ வதந்தியை கிளப்பிவிட்டுள்ளார்கள். நான் சம்பளத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவள் அல்ல. எனது கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறேன்.
தமிழ்
தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் ஒரு காதல் கதை படம் மூலம் எனக்கு வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன். தமிழ் படங்களில் நடிக்க வசதியாக தமிழ் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
கிசுகிசு
என்னை பற்றி ஒரு கிசுகிசுவும் வரவில்லையே என்று நான் நினைத்தது உண்டு. நான் யாரையும் காதலிக்கவில்லை. அதனால் கிசுகிசு வரவில்லை. கிசுகிசு வராமல் இருப்பதும் நல்லது தானே.