Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
நச்சு நச்சுன்னு இச்சு கொடுப்பதில் தப்பு இல்லீங்க: "தில்லு முல்லு" நாயகி!
சென்னை: முத்தம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி. அதனால் முத்தக் காட்சிகளில் நடிப்பதில் தவறு எதுவும் இல்லை என்று நடிகை இஷா தல்வார் தெரிவித்துள்ளார்.
சிவா நடித்த தில்லுமுல்லு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மும்பையை சேர்ந்த இஷா தல்வார். அதன் பிறகு அவரை தமிழ் படங்கள் பக்கமே காணவில்லை. மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் 3 ஆண்டுகள் கழித்து இஷா மீண்டும் கோலிவுட் வந்துள்ளார். அவர் நடித்துள்ள மீண்டும் ஒரு காதல் கதை இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து இஷா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காதல்
படத்தில் மட்டும் தான் காதலிக்கிறேன். நிஜத்தில் இதுவரை யாரையும் காதலித்தது இல்லை. என்னை யாருடனும் சேர்த்து இதுவரை கிசுகிசுவும் வந்தது இல்லை.
முத்தக் காட்சி
முத்தம் என்பது மனித வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகும். அப்படி இருக்கும்போது முத்தக்காட்சியில் நடிப்பதில் தவறு எதுவும் இல்லை. படத்திற்கு தேவை என்றால் நிச்சயம் முத்தக் காட்சியில் நடிப்பேன்.
இடைவெளி ஏன்?
மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்ததால் தமிழில் இடைவெளி விழுந்துவிட்டது. இனி தமிழ் படங்களில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்.
சோகம்
நடிப்பது தான் என் தொழில். அப்படி இருக்கையில் அனைத்து வகை காட்சிகளிலும் நடிப்பது என் கடமை. காதல், சோகம் எல்லா காட்சிகளுமே நடிப்பு தான். இதில் சிரமமான காட்சி, எளிதான காட்சி என்றெல்லாம் இல்லை.