Don't Miss!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- News ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் ஜாமீன் வந்த நடிகர் ரூசோ தலைமறைவு.. தீவிரமாக தேடும் தனிப்படை
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
செலிபிரிட்டி பவரை பயன்படுத்தும் சூட்சுமம் அறிந்த ஓவியா!
சென்னை : 'களவாணி' படத்தின் மூலம் அறிமுகமான ஓவியாவிற்கு அதன்பிறகும் தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
தொடர்ந்து அவர் நடித்தவை எல்லாம் சிறு பட்ஜெட் மற்றும் இரண்டாம் நிலை ஹீரோக்கள் நடித்த படங்கள் தான். தனது அம்மாவின் மருத்துவச் செலவுக்காக கிடைத்த வாய்ப்பையெல்லாம் ஏற்றுக்கொண்டார்.
போதிய பட வாய்ப்பில்லாமல் இருந்த ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
பிக்பாஸ் புகழ் :
பிக்பாஸ் வீட்டிற்குள் தனது தனித்துத் தெரியும் நற்குணங்களால் சக போட்டியாளர்களால் அவமானப் படுத்தப்பட்டாலும்அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. சமூகவலைத்தளங்களில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஒரு ரசிகர் படையே உருவானது.
மக்கள் ஆதரவு :
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு மக்கள் மத்தியில் தனக்கு உள்ள வரவேற்பைப் புரிந்துகொண்டார் ஓவியா. அவர் முன்பு நடித்த படங்களை எல்லாம் இந்த நேரத்தில் வெளியிட்டு லாபம் பார்க்க நினைக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆகவே, ஓவியாவும் மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.
கடைத்திறப்பு விழாக்கள் :
சாதாரணமாக கடை திறப்பு விழாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த ஓவியா, தற்போது பிரபலமான ஒரு கடையைத் திறந்து வைக்கவும், விளம்பரத்தில் நடிக்கவும் சில லட்சங்கள் வாங்கி இருக்கிறார்.
புதிய படங்களில் நடிக்க :
நிறைய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஓவியாவை தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி ஓவியாவும் தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்திக் கேட்டு வருகிறாராம்.