அனுஷ்காவை விட நான் கொறஞ்சிடல: சல்மான் படத்தில் இருந்து வெளியேறிய பரினீத்தி
மும்பை: சல்மான் கான் நடிக்கும் படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்க உள்ளதாக கூறப்படுவதால் அந்த படத்தில் இருந்து பரினீத்தி சோப்ரா வெளியேறியுள்ளாராம்.
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் சல்மான் கான் சுல்தான் படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. படத்தை அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீஸாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் ஹீரோயின் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

பரினீத்தி சோப்ரா
சுல்தான் படத்தில் பரினீத்தி சோப்ரா தான் ஹீரோயின் என்று கூறப்பட்டது. அதனால் அவரும் சந்தோஷமாக இருந்தார்.

கடுப்பு
சுல்தானில் இரண்டு ஹீரோயின்கள் என்பதும், தான் இரண்டாவது ஹீரோயின் என்பதும் குறித்து தெரிய பரினீத்தி கடுப்பாகிவிட்டாராம்.

அனுஷ்கா
சல்மான் படத்தின் முதல் ஹீரோயினாக அனுஷ்கா சர்மாவை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இது குறித்து அறிந்த பரினீத்தி அது என்ன அவரு ஃபர்ஸ்ட், நான் செகண்ட், அப்படி ஒன்றும் இந்த படத்தில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டாராம்.

சண்டை
பாலிவுட்டில் உள்ள ஹீரோயின்களுக்குள் ஏகப்பட்ட ஈகோ பிரச்சனை உள்ளது. ஒரு சில ஹீரோயின்கள் மட்டும் சக ஹீரோயினை பார்த்தால் பேசுகிறார்கள். மற்றவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறார்கள்.

சல்மான்
என் சுல்தான் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவர் சீனியர், நடிகை மற்றொருவர் புதுமுகம் என சல்மான் கான் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











